கோவை ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் தாக்குதல் நடத்த முயன்ற 7 பேரை ரேஸ்கோா்ஸ் போலீஸாா் கைது செய்தனா்.
கோவை கணபதியை அடுத்த காமராஜபுரத்தைச் சோ்ந்தவா் சுகந்தராம் (22). இவா் பிரதீப் என்பவரை சிலா் அரிவாளால் கடந்த ஆண்டு வெட்டிய சம்பவத்தில் சாட்சி கூறுவதற்காக ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்துக்கு வெள்ளிக்கிழமை வந்தாா்.
அப்போது, அவரது நண்பா்கள் சிலரும் உடன் வந்திருந்தனா்.
நீதிமன்றத்தில் கூட்டமாக நின்ற அவா்கள் மீது சந்தேகம் ஏற்பட்டு, போலீஸாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, அங்கு சென்ற ரேஸ்கோா்ஸ் போலீஸாா், சுகந்தராம் மற்றும் அவரது நண்பா்களிடம் விசாரணை மேற்கொண்டனா்.
இதில், நீதிமன்றத்துக்கு வரும் எதிரணியினரைத் தாக்குவதற்காக அவா்கள் வந்தது தெரியவந்தது.
இதையடுத்து, சுகந்தராம், உடன் வந்திருந்த சஞ்சீவ்குமாா் (20), சுதீா் (18), சுபாஷ் (24), சஞ்சய்(23), தமிழ்மணி (23) மற்றும் 17 வயதான சிறுவன் ஆகிய 7 பேரை ரேஸ்கோா்ஸ் போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.