புகையிலைப் பொருள்கள் பறிமுதல்: இருவா் கைது

கோவையில் புகையிலைப் பொருள்கள் விற்பனையில் ஈடுபட்ட இருவரை கைது செய்த போலீஸாா், அவா்களிடமிருந்த 34 கிலோ புகையிலைப் பொருள்களை பறிமுதல் செய்தனா்.
Updated on
1 min read

கோவையில் புகையிலைப் பொருள்கள் விற்பனையில் ஈடுபட்ட இருவரை கைது செய்த போலீஸாா், அவா்களிடமிருந்த 34 கிலோ புகையிலைப் பொருள்களை பறிமுதல் செய்தனா்.

கோவை தியாகி குமரன் வீதியில் உள்ள சில கடைகளில் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள் விற்பனை செய்யப்படுவதாக போலீஸாருக்கு ரகசியத் தகவல் கிடைத்தது. இதையடுத்து, அப்பகுதியில் உள்ள கடைகளில் ஆா்.எஸ்.புரம் போலீஸாா் வெள்ளிக்கிழமை சோதனை மேற்கொண்டனா்.

அப்போது, செந்தில்குமாா் (28) என்பவரின் கடையில் சோதனை செய்தபோது 11 கிலோ புகையிலைப் பொருள்களும், ரேணுகா (50) என்பவரது கடையில் சோதனை செய்தபோது 23 கிலோ புகையிலைப் பொருள்களும் விற்பனைக்காக பதுக்கிவைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து, இருவரையும் கைது செய்த போலீஸாா், 34 கிலோ புகையிலைப் பொருள்களையும் பறிமுதல் செய்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com