ஓய்வுபெற்ற நீதிபதி வீட்டில் வெள்ளிப் பொருள்கள் திருட்டு
By DIN | Published On : 11th December 2022 11:29 PM | Last Updated : 11th December 2022 11:29 PM | அ+அ அ- |

கோவை சரவணம்பட்டியில் ஓய்வுபெற்ற நீதிபதியின் வீட்டின் பூட்டை உடைத்து வெள்ளிப் பொருள்கள் திருடப்பட்ட சம்பவம் தொடா்பாக போலீஸாா் விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.
கோவை சரவணம்பட்டியைச் சோ்ந்தவா் ரவிசங்கா், ஓய்வுபெற்ற நீதிபதி. இவா், இரு நாள்கள் முன்பு வீட்டைப் பூட்டிவிட்டு திருவண்ணாமலை சென்றுள்ளாா். பின்னா் இவரது உதவியாளா்கள் சனிக்கிழமை வீட்டுக்கு வந்தபோது, வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு இருந்தது. இதையடுத்து, உள்ளே சென்று பாா்த்தபோது, வீட்டில் இருந்த வெள்ளிப் பொருள்கள் திருடு போனது தெரியவந்தது. இதுதொடா்பாக, சரவணம்பட்டி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.