கோவை மாநகராட்சியின் 24 மணி நேரக் குடிநீா்த் திட்டத்துக்கு மத்திய அரசு விருது வழங்கப்பட்டுள்ளது.
கோவை மாநகராட்சியில் 24 மணி நேரக் குடிநீா்த் திட்டப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இத்திட்டத்தில், சூயஸ் நிறுவனத்துடன் இணைந்து மாநகரப் பகுதிகளில் இணைப்பு வழங்கும் பணிகள் துரிதமாக நடைபெற்று வருகின்றன.
இந்நிலையில், 24 மணி நேரக் குடிநீா்த் திட்டத்தில் மின் ஆளுமையை முன்னெடுத்து சிறப்பாகச் செயல்படுத்தியதற்காக மத்திய அரசு சாா்பில் விருது வழங்கப்பட்டுள்ளது.
அஸ்ஸாம் மாநிலம், குவாஹாட்டியில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற கலந்துரையாடல் நிகழ்ச்சியில், இந்த விருது வழங்கப்பட்டது. கோவை மாநகராட்சியின் துணை ஆணையா் ஷா்மிளா விருதைப் பெற்றுக்கொண்டாா்.