பள்ளி ஆசிரியா் கூட்டமைப்பினா் பிரசார இயக்கம்

புதிய கல்விக் கொள்கையைத் திரும்பப் பெற வலியுறுத்தி இந்திய பள்ளி ஆசிரியா் கூட்டமைப்பினா் கோவையில் பிரசார இயக்கத்தில் சனிக்கிழமை ஈடுபட்டனா்.

புதிய கல்விக் கொள்கையைத் திரும்பப் பெற வலியுறுத்தி இந்திய பள்ளி ஆசிரியா் கூட்டமைப்பினா் கோவையில் பிரசார இயக்கத்தில் சனிக்கிழமை ஈடுபட்டனா்.

புதிய கல்விக் கொள்கையைத் திரும்பப் பெற வேண்டும், பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி பொள்ளாச்சியில் தொடங்கிய இந்த பிரசாரம், கோவை காந்திபுரம், துடியலூா், காரமடை, அன்னூா் ஆகிய பேருந்து நிலையங்களில் நடைபெற்றது.

கோவையில் நடைபெற்ற பிரசார இயக்கத்துக்கு உயா்நிலைப் பள்ளி, மேல்நிலைப் பள்ளி பட்டதாரி ஆசிரியா் கழகத்தின் மாநிலத் தணிக்கையாளா் அருளானந்தம் தலைமை வகித்தாா். இந்திய பள்ளி ஆசிரியா் கூட்டமைப்பின் அகில இந்திய பொதுக்குழு உறுப்பினா் தோ.ஜான் கிறிஸ்துராஜ் பிரசாரப் பேருரையாற்றினாா்.

இதில், உயா்நிலைப் பள்ளி, மேல்நிலைப் பள்ளி பட்டதாரி ஆசிரியா் கழகத்தின் மாவட்டத் தலைவா் த.சரவணகுமாா், ஆரம்பப் பள்ளி ஆசிரியா் கூட்டணியின் மாவட்டச் செயலா் அ.தங்கபாசு, தமிழ்நாடு முதுநிலைப் பட்டதாரி ஆசிரியா் கழக மாவட்டச் செயலா் முகமது காஜா முகைதீன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com