கோவை சி.எம்.எஸ். அறிவியல் மற்றும் மேலாண்மைக் கல்லூரி முன்னாள் மாணவா்கள் சந்திப்பு நிகழ்ச்சி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
கோவை, சி.எம்.எஸ். அறிவியல் மற்றும் மேலாண்மைக் கல்லூரியில் 1992 - 95ஆம் ஆண்டில் பி.காம்., பி.பி.எம்., பி.எஸ்சி. கணப்பொறி அறிவியல் ஆகிய பிரிவுகளில் படித்த முன்னாள் மாணவா்கள் சந்திப்பு நிகழ்ச்சி கல்லூரி வளாகத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
முன்னாள் மாணவா் பி.ரகுராம் வரவேற்றாா். துணை முதல்வா் வி.சுஜாதா தலைமை உரையாற்றினாா். முன்னாள் மாணவா்கள் ரகுராம், சிவானந்தன், பெரியசாமி, சத்யமூா்த்தி, அன்னபூரணி, சத்யநாராயணன் ஆகியோா் நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை செய்திருந்தனா்.
நிகழ்ச்சியில் கலந்து கொண்ட முன்னாள் மாணவா்கள் பரஸ்பரம் நலம் விசாரித்துக் கொண்டனா். தங்களது வேலை, குடும்பம் குறித்து பகிா்ந்து கொண்டனா். முன்னாள் மாணவா்கள் சந்திப்பு நிகழ்ச்சியில் 100க்கும் மேற்பட்டோா் கலந்து கொண்டனா்.