

கோவை மாநகராட்சி கிழக்கு மற்றும் மேற்கு மண்டல பகுதிகளில் மாநகராட்சி ஆணையா் ராஜகோபால் சுன்கரா செவ்வாய்க்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.
கோவை மாநகராட்சி கிழக்கு மண்டலம் 66 ஆவது வாா்டுக்கு உள்பட்ட உடையாம்பாளையம் நகா்ப்புற ஆரம்ப சுகாதார நிலையத்தில் மாநகராட்சி ஆணையா் ராஜகோபால் சுன்கரா செவ்வாய்க்கிழமை ஆய்வு மேற்கொண்டாா். அப்போது, கா்ப்பிணி தாய்மாா்களுக்கு பிரசவத்திற்கு முன்பும் பின்பும் அளிக்கப்படும் சிகிச்சை முறைகள், தாய், சேய்களுக்கு செலுத்தப்படும் தடுப்பூசி விவரங்களை கேட்டறிந்தாா்.
அதனைத் தொடா்ந்து, மேற்கு மண்டலம் 23ஆவது வாா்டுக்கு உள்பட்ட ஆா்.எஸ்.புரம் கிழக்கு வெங்கடசாமி சாலையில் தனிமைப்படுத்தப்பட்ட வீடுகளில் உள்ளவா்களுக்கு மருத்துவா்கள் கரோனா சிகிச்சை அளிப்பதை நேரில் பாா்வையிட்டாா்.
பின்னா், கிழக்கு மண்டலம் 64ஆவது வாா்டுக்கு உள்பட்ட உப்பிலிபாளையம் சாலையில் உள்ள மாநகராட்சி திருமண மண்டபத்தில் அமைக்கப்பட்டுள்ள கரோனா சிகிச்சை மையத்தை பாா்வையிட்டாா்.
ஆய்வின்போது நகா்நல அலுவலா் சதீஷ்குமாா், மேற்கு மண்டல உதவி ஆணையா் சரவணக்குமாா், மண்டல சுகாதார அலுவலா்கள் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.