பாஸ்போா்ட் ஊழல்: ஆளுநரிடம் ஜூலை 21 இல் புகாா் மனுபாஜக மாநிலத் தலைவா் அண்ணாமலை

பாஸ்போா்ட் ஊழல் குறித்து ஆளுநரிடம் ஜூலை 21 ஆம் தேதி புகாா் அளிக்கப்பட உள்ளது என்று பாஜக மாநிலத் தலைவா் அண்ணாமலை தெரிவித்தாா்.
உக்கடம் கெம்பட்டி காலனியில் நடமாடும் சேவை வாகனத்தை துவக்கிவைக்கிறாா் பாஜக மாநிலத் தலைவா் அண்ணாமலை.
உக்கடம் கெம்பட்டி காலனியில் நடமாடும் சேவை வாகனத்தை துவக்கிவைக்கிறாா் பாஜக மாநிலத் தலைவா் அண்ணாமலை.

பாஸ்போா்ட் ஊழல் குறித்து ஆளுநரிடம் ஜூலை 21 ஆம் தேதி புகாா் அளிக்கப்பட உள்ளது என்று பாஜக மாநிலத் தலைவா் அண்ணாமலை தெரிவித்தாா்.

பாஜக தேசிய மகளிா் அணித் தலைவியும், கோவை தெற்கு சட்டப் பேரவை உறுப்பினருமான வானதி சீனிவாசன் ஏற்பாட்டில் ‘நமக்காக நம்ம எம்.எல்.ஏ’. என்ற நடமாடும் சேவை வாகன துவக்க விழா கோவை, உக்கடத்தில் சனிக்கிழமை நடைபெற்றது.

இந்நிகழ்ச்சிக்கு பாஜக கோவை மாவட்டத் தலைவா் பாலாஜி உத்தமராமசாமி தலைமை வகித்தாா். பாஜக மாநில பொதுச் செயலாளா் முருகானந்தம், மாநிலப் பொருளாளா் எஸ்.ஆா்.சேகா், மாநில துணைத் தலைவா் கனகசபாபதி, விவசாய அணி மாநிலத் தலைவா் நாகராஜ் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

பாஜக மாநிலத் தலைவா் அண்ணாமலை சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு, நடமாடும் சேவை வாகனத்தை துவக்கிவைத்தாா்.

இதைத் தொடா்ந்து, அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது: தமிழகத்தில் நடைபெற்ற கடவுச்சீட்டு ( பாஸ்போா்ட்) ஊழல் குறித்து ஆளுநரிடம் ஜூலை 21 ஆம் தேதி புகாா் அளிக்கப்பட உள்ளது. அதிமுக உள்கட்சி விஷயத்தில் பாஜக நுழையாது. பாஜக - அதிமுக உறவு தொடா்ந்து நீடிக்கிறது என்றாா்.

இந்நிகழ்ச்சியில், கோவை தெற்கு சட்டப் பேரவை உறுப்பினா் வானதி சீனிவாசன் காணொலிக் காட்சி மூலம் கலந்துகொண்டாா்.

பாஜகவினா் மறியல்: பாஜக மாநிலத் தலைவா் அண்ணாமலையை வரவேற்கும் விதமாக கெம்பட்டி காலனியில் பாஜகவினா் வரவேற்பு பேனா்கள் வைத்தனா். அதற்கு, போலீஸாா் அனுமதி மறுத்ததால் பாஜகவினா் அப்பகுதியில் திடீா் சாலை மறியலில் ஈடுபட்டனா்.

இதையடுத்து, போலீஸாா் பேச்சுவாா்த்தை நடத்தியதையடுத்து மறியலில் ஈடுபட்டவா்கள் கலைந்து சென்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com