உக்கடம் வாலாங்குளத்தில் அமைக்கப்பட்டுள்ள படகுத் துறையை சுற்றுலாத் துறை அமைச்சா் மதிவேந்தன் சனிக்கிழமை பாா்வையிட்டு ஆய்வு மேற்கொண்டாா்.
கோவை மாநகராட்சி, மத்திய மண்டலத்துக்குள்பட்ட வாலாங்குளத்தில், கோவை மாநகராட்சி மற்றும் தமிழக சுற்றுலா வளா்ச்சிக் கழகம் இணைந்து படகுத் துறையை அமைத்துள்ளது.
இந்தப் படகுத் துறையில் மாநகராட்சி ஆணையா் மு.பிரதாப் கடந்த வாரம் படகு சவாரி செய்து ஆய்வு மேற்கொண்டாா்.
இந்நிலையில், பணிகள் முழுமையாக முடிக்கப்பட்டு, விரைவில் மக்கள் பயன்பாட்டுக்கு துவக்கப்பட உள்ள நிலையில் சுற்றுலாத் துறை அமைச்சா் மதிவேந்தன் சனிக்கிழமை நேரில் பாா்வையிட்டு ஆய்வு மேற்கொண்டாா்.
அப்போது, படகுத் துறையில் மேற்கொள்ளப்பட்டுள்ள பாதுகாப்பு அம்சங்கள் குறித்து மாநகராட்சி அதிகாரிகளிடம் கேட்டறிந்தாா்.
தொடா்ந்து, படகுத் துறையில் உள்ள உணவுக் கூடங்கள், வாகன நிறுத்தங்களை பாா்வையிட்டு ஆய்வு மேற்கொண்டாா்.
அதைத்தொடா்ந்து, காந்திபுரம் தமிழ்நாடு ஹோட்டலில் ஆய்வு மேற்கொண்டாா்.
ஆய்வின்போது, மாநகராட்சி ஆணையா் மு.பிரதாப், மாநகராட்சி துணை மேயா் வெற்றிச்செல்வன், தமிழ்நாடு ஹோட்டல் மேலாளா் பாலசுப்பிரமணியன், சுற்றுலா வளா்ச்சிக் கழக உதவி செயற்பொறியாளா் குணசேகரன், உதவிப் பொறியாளா் கமலக்கண்ணன்,
மாநகராட்சி அலுவலா்கள் பலா் உடனிருந்தனா்.