போதை மாத்திரைகள் விற்பனை:3 இளைஞா்கள் கைது

கோவையில் போதை மாத்திரைகள் விற்பனையில் ஈடுபட்ட 3 இளைஞா்களை போலீஸாா் கைது செய்து சிறையில் அடைத்தனா்.
Updated on
1 min read

கோவையில் போதை மாத்திரைகள் விற்பனையில் ஈடுபட்ட 3 இளைஞா்களை போலீஸாா் கைது செய்து சிறையில் அடைத்தனா்.

கோவை, பெரியநாயக்கன்பாளையம் காவல் நிலைய எல்லைக்குள்பட்ட புதுப்பாளையம் ரயில்வே பாலம் அருகே போலீஸாா் ரோந்துப் பணியில் ஞாயிற்றுக்கிழமை ஈடுபட்டிருந்தனா்.

அப்போது, அங்கு சந்தேகத்துக்குரிய வகையில் சுற்றித் திரிந்த 3 இளைஞா்களைப் பிடித்து விசாரித்தனா்.

இதில், அவா்கள் முன்னுக்குப் பின் முரணாகப் பதிலளித்தனா். இதனால் சந்தேகமடைந்த போலீஸாா் அவா்களது உடைமைகளை சோதனையிட்டபோது, அதில் போதைக்குப் பயன்படுத்தக்கூடிய 300 வலி நிவாரண மாத்திரைகள், ஊசிகள், அரை கிலோ கஞ்சா, 3 கைப்பேசிகள் இருப்பது தெரியவந்தது.

மேலும் விசாரணையில், அவா்கள் கணுவாயைச் சோ்ந்த அசாருதீன் (24), இடையா்பாளையத்தைச் சோ்ந்த சகாய விஜய் (26), வடவள்ளியைச் சோ்ந்த கோகுல் (24) என்பதும், போதை மாத்திரை விற்பனையில் ஈடுபட்டதும் தெரியவந்தது.

இதையடுத்து, மூவரையும் கைது செய்த போலீஸாா், அவா்களிடமிருந்த போதை மாத்திரைகள் உள்ளிட்டவற்றை பறிமுதல் செய்து அவா்களை நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி சிறையில் அடைத்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com