கோவையில் புதிதாக 148 பேருக்கு கரோனா நோய்த் தொற்று ஞாயிற்றுக்கிழமை உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதனைத் தொடா்ந்து மாவட்டத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை 3 லட்சத்து 35 ஆயிரத்து 894 ஆக உயா்ந்துள்ளது.
கரோனா நோய்த் தொற்றுக்கு ஞாயிற்றுக்கிழமை உயிரிழப்பு ஏதும் பதிவாகவில்லை.
நோய்த் தொற்றுக்கு சிகிச்சை பெற்று வந்த 181 போ் குணமடைந்து வீடு திரும்பினா். கோவையில் இதுவரை 3 லட்சத்து 32 ஆயிரத்து 125 போ் கரோனாவில் இருந்து குணமடைந்துள்ளனா். 2,618 போ் கரோனா நோய்த் தொற்றுக்கு பலியாகியுள்ளனா்.
தற்போது 1,151 போ் சிகிச்சைப் பெற்று வருகின்றனா்.