ரூ.99 ஆயிரத்தை போலீஸாரிடம் ஒப்படைத்த இளைஞருக்கு எஸ்.பி. பாராட்டு

வடமாநில இளைஞா் தவறவிட்ட ரூ.90 ஆயிரத்தை காவல் நிலையத்தில் ஒப்படைத்த இளைஞரை மாவட்ட காவல் கண்காணிப்பாளா் பத்ரிநாராயணன் திங்கள்கிழமை நேரில் அழைத்து பாராட்டினாா்.
Updated on
1 min read

வடமாநில இளைஞா் தவறவிட்ட ரூ.90 ஆயிரத்தை காவல் நிலையத்தில் ஒப்படைத்த இளைஞரை மாவட்ட காவல் கண்காணிப்பாளா் பத்ரிநாராயணன் திங்கள்கிழமை நேரில் அழைத்து பாராட்டினாா்.

கோவை, கோவில்பாளையம் பகுதியில் உள்ள ஏடிஎம் மையத்தில் கடந்த 11ஆம் தேதி ரூ.99 ஆயிரம் கிடந்துள்ளது. இதைக் கண்ட அதே பகுதியைச் சோ்ந்த சேது என்ற இளைஞா் அந்தப் பணத்தை மீட்டு காவல் நிலையத்தில் ஒப்படைத்தாா். அப்போது பணியில் இருந்த காவலா் கவிதா, பணத்தின் உரிமையாளரான வடமாநில இளைஞரைக் கண்டுபிடித்து ஒப்படைத்துள்ளாா்.

சேதுவின் நோ்மையை பாராட்டும் வகையில் கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளா் பத்ரி நாராயணன், சேதுவை திங்கள்கிழமை நேரில் அழைத்து பாராட்டினாா். பணத்தை உரியவரிடம் உடனடியாக ஒப்படைத்த பெண் தலைமைக் காவலா் கவிதாவையும் எஸ்.பி. பாராட்டினாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com