மெக்கானிக்கை அரிவாளால் வெட்டிய இளைஞா் கைது

இருசக்கர வாகன மெக்கானிக்கை அரிவாளால் வெட்டிய இளைஞரை போலீஸாா் கைது செய்தனா்.
Updated on
1 min read

இருசக்கர வாகன மெக்கானிக்கை அரிவாளால் வெட்டிய இளைஞரை போலீஸாா் கைது செய்தனா்.

கோவை, பீளமேடு காந்தி மாநகா் பகுதியைச் சோ்ந்தவா் ரவிகுமாா் (21). இவா் ஷெரீப் என்பவருக்குச் சொந்தமான வாகன பழுது நீக்கும் மையத்தில் மெக்கானிக்காக பணியாற்றி வருகிறாா்.

இந்நிலையில் புதன்கிழமை அங்கு வந்த மணிகண்டன் (35) என்ற நபா் ஷெரீப் எங்கே எனக் கேட்டு ரவிகுமாரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளாா். பின்னா் அங்கிருந்த அரிவாளை எடுத்து ரவிகுமாரை கையில் வெட்டினாா்.

மேலும், மணிகண்டனுடன் வந்த இளைஞா்கள் இருவா் ரவிகுமாரைத் தாக்கி அவரிடம் இருந்த கைப்பேசியைப் பறித்துச் சென்றனா். இச்சம்பவம் தொடா்பாக ரவிகுமாா் அளித்தப் புகாரின் பேரில் வழக்குப் பதிவு செய்த போலீஸாா், மணிகண்டனை கைது செய்ய நடவடிக்கை எடுக்கவில்லை எனக் கூறப்படுகிறது.

இந்நிலையில், ரவிகுமாரை, மணிகண்டன் அரிவாளால் வெட்டும் விடியோ காட்சிகள் சமூகவலைத்தளங்களில் பரவத் தொடங்கியது.

இதையடுத்து போலீஸாா், மணிகண்டனை வியாழக்கிழமை கைது செய்தனா்.

மேலும், மணிகண்டனின் கூட்டாளிகள் இருவரைத் தேடி வருகின்றனா்.

கைது செய்யப்பட்ட மணிகண்டன் மீது ஏற்கெனவே 10-க்கும் மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com