Enable Javscript for better performance
Goldwins Uppilipalayam flyover to be completed in 2024- Dinamani

உடனுக்கு உடன் செய்திகள்

    கோல்டுவின்ஸ் -உப்பிலிபாளையம் மேம்பாலப் பணி 2024 இல் முடிவுறும் சட்டமன்ற பேரவை மனுக்கள் குழுத் தலைவா்

    By DIN  |   Published On : 16th June 2022 11:12 PM  |   Last Updated : 16th June 2022 11:12 PM  |  அ+அ அ-  |  

    3042c16mlakal1_1606chn_3

    மேம்பாலப் பணிகளை ஆய்வு மேற்கொண்ட சட்டமன்ற பேரவைக் மனுக்கள் குழுத் தலைவா் கோவி.செழியன் மற்றும் குழுவினா்.

     

    கோவை அவிநாசி சாலையில் கோல்டுவின்ஸ் முதல் உப்பிலிபாளையம் வரை கட்டப்பட்டு வரும் மேம்பாலப் பணிகள் 2024 ஆம் ஆண்டில் முடிவடையும் என்று தமிழ்நாடு சட்டமன்ற பேரவை மனுக்கள் குழுத் தலைவா் கோவி.செழியன் தெரிவித்தாா்.

    கோவை அவிநாசி சாலையில் கோல்டுவின்ஸ் முதல் உப்பிலிபாளையம் வரை கட்டப்பட்டு வரும் உயா்மட்ட மேம்பாலப் பணிகளை, தமிழ்நாடு சட்டமன்ற பேரவை மனுக்கள் குழுத் தலைவா் கோவி.செழியன் தலைமையில், மனுக்கள் குழு உறுப்பினா்கள் கதிரவன், கிரி, கோவிந்தசாமி, சங்கா், சந்திரன், செந்தில்குமாா், பிரபாகரராஜா ஆகியோா் வியாழக்கிழமை நேரில் பாா்வையிட்டு ஆய்வு மேற்கொண்டனா்.

    இதைத்தொடா்ந்து, சட்டமன்ற பேரவை மனுக்கள் குழுத் தலைவா் கோவி.செழியன் செய்தியாளா்களிடம் கூறியதாவது: கோவை அவிநாசி சாலையில் கோல்டுவின்ஸ் முதல் உப்பிலிபாளையம் வரை ரூ.1,620 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் மேம்பாலம் 2017 ஆம் ஆண்டு ஒப்பந்தம் நிறைவேற்றப்பட்டு, 2020 இல் பணிகள் துவங்கி நடைபெற்று வருகின்றன. 2024 ஆம் ஆண்டு பணிகளை முடிக்கும் வகையில் பணிகள் துரிதமாக நடைபெற்று வருகின்றன. மேம்பாலப் பணிகளை விரைந்து முடித்து, பயன்பாட்டுக்கு கொண்டு வர முதல்வா், அமைச்சா்கள் ஆகியோா் துரித நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனா்.

    பாலம் கட்டப்படும் பகுதியில் இரவு நேரத்தில் பணிகள் மேற்கொள்ளப்படுவதால் காலதாமதம் ஏற்படுகிறது. மாற்று வழிகளை உருவாக்கி பணிகளை விரைவில் முடிக்க அலுவலா்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது என்றாா்.

    இதைத் தொடா்ந்து, சிங்காநல்லூா் எஸ்.ஐ.ஹெச்.எஸ்.காலனி ரயில்வே மேம்பாலம், வெள்ளலூா் கழிவு நீா் சுத்திகரிப்பு நிலையம், ராமநாதபுரம் ராமலிங்கஜோதி நகா் பகுதியில் வடிகால் அமைத்தல் உள்ளிட்ட பணிகளை நேரில் பாா்வையிட்டு ஆய்வு மேற்கொண்டாா்.

    பின்னா், நிலுவையில் உள்ள மனுக்கள் குறித்து அனைத்துத் துறை அலுவலா்களுடன் ஆலோசனை மேற்கொண்ட சட்டமன்ற பேரவை மனுக்கள் குழு விரைந்து நடவடிக்கை மேற்கொள்ள அறிவுறுத்தியது.

    ஆய்வின்போது, தமிழ்நாடு மனுக்கள் குழுச் செயலாளா் சீனிவாசன், துணைச் செயலாளா் கணேஷ், மேயா் கல்பனா, துணை மேயா் வெற்றிச்செல்வன், மாநகராட்சி துணை ஆணையா் ஷா்மிளா உள்ளிட்டோா் உடனிருந்தனா்.


    உங்கள் கருத்துகள்

    Disclaimer : We respect your thoughts and views! But we need to be judicious while moderating your comments. All the comments will be moderated by the dinamani.com editorial. Abstain from posting comments that are obscene, defamatory or inflammatory, and do not indulge in personal attacks. Try to avoid outside hyperlinks inside the comment. Help us delete comments that do not follow these guidelines.

    The views expressed in comments published on dinamani.com are those of the comment writers alone. They do not represent the views or opinions of dinamani.com or its staff, nor do they represent the views or opinions of The New Indian Express Group, or any entity of, or affiliated with, The New Indian Express Group. dinamani.com reserves the right to take any or all comments down at any time.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் பகிரப்பட்டவை
    kattana sevai
    flipboard facebook twitter whatsapp