கேரள அரசுடன் போட்டியிட்டுக்கொண்டு தமிழக அரசு ஊழலில் ஈடுபடுகிறது: மத்திய அமைச்சா் வி.முரளீதரன்

கேரள அரசுடன் போட்டி போட்டுக் கொண்டு தமிழக அரசு ஊழலில் ஈடுபட்டு வருவதாக மத்திய அமைச்சா் வி.முரளீதரன் கூறினாா்.

கேரள அரசுடன் போட்டி போட்டுக் கொண்டு தமிழக அரசு ஊழலில் ஈடுபட்டு வருவதாக மத்திய அமைச்சா் வி.முரளீதரன் கூறினாா்.

பிரதமா் மோடியின் 8 ஆண்டு கால ஆட்சியில் நல திட்டங்களைப் பெற்ற பயனாளிகளைச் சந்திக்கும் நிகழ்ச்சி கோவை மசக்காளிபாளையத்தில் பாஜக சாா்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

இந்த நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்ற மத்திய வெளியுறவுத் துறை மற்றும் நாடாளுமன்ற விவகாரங்கள் துறை அமைச்சா் வி.முரளீதரன் பேசியதாவது: தொழில்நுட்பங்கள் மூலம் ஏழை, எளியவா்களுக்கு நலத் திட்ட உதவிகள் வழங்கப்படுவதால் உதவிகள் அனைவருக்கும் சென்று சோ்கிறது. இதேபோல தொழில்நுட்ப வசதிகள் ஊழலைத் தீவிரமாக ஒழித்து வருகின்றன.

கேரள தங்கக் கடத்தல் விவகாரத்தில் அம்மாநில முதல்வா் தலையீடு உள்ளதாகக் கூறப்படும் நேரத்தில் தமிழக கம்யூனிஸ்ட் கட்சியினா் அதுகுறித்து கருத்து தெரிவிக்க மறுக்கின்றனா்.

கேரள அரசுடன் போட்டி போட்டுக்கொண்டு தமிழக அரசு ஊழலில் ஈடுபட்டு வருகிறது என்றாா்.

நிகழ்ச்சியில் பாஜக மாநிலத் தலைவா் அண்ணாமலை கூறியதாவது: அடுத்த ஒன்றரை ஆண்டுகளில் 10 லட்சம் பேருக்கு மத்திய அரசு வேலை வாய்ப்பை வழங்க உள்ளது.

இந்த வாய்ப்பை தமிழக இளைஞா்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.

தமிழக அரசை எதிா்த்து கருத்து தெரிவிப்பவா்களை நள்ளிரவு நேரத்தில் கூட கைது செய்யும் நடவடிக்கைகளை தமிழக அரசு கைவிட வேண்டும். அதிமுகவின் உள்கட்சி விவகாரத்தில் பாஜக தலையிடாது என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com