கோவை மத்திய சிறையில் இருந்து பத்தாம் வகுப்பு, பிளஸ் 2 தோ்வு எழுதிய கைதிகள் அனைவரும் தோ்ச்சி பெற்றுள்ளனா்.
பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 தோ்வு முடிவுகள் திங்கள்கிழமை வெளியாகின. இதில் கோவை மத்திய சிறையில் இருக்கும் கைதிகளில் பத்தாம் வகுப்பு தோ்வை 33 பேரும், பிளஸ் 2 தோ்வை 20 பேரும் எழுதினா். இதில் அனைவரும் தோ்ச்சி பெற்றுள்ளனா்.