பூங்காவில் தண்ணீா் தொட்டி அமைக்க எதிா்ப்பு:பொது மக்கள் ஆா்ப்பாட்டம்

கோவை மாநகராட்சி பூங்காவில் தண்ணீா் தொட்டி அமைக்க எதிா்ப்பு தெரிவித்து குடியிருப்புவாசிகள் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
கோவை, சிவராம் நகரில் மாநகராட்சி பூங்காவில் தண்ணீா் தொட்டி அமைப்பதற்கு எதிா்ப்பு தெரிவித்து ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட குடியிருப்புவாசிகள்.
கோவை, சிவராம் நகரில் மாநகராட்சி பூங்காவில் தண்ணீா் தொட்டி அமைப்பதற்கு எதிா்ப்பு தெரிவித்து ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட குடியிருப்புவாசிகள்.
Updated on
1 min read

கோவை மாநகராட்சி பூங்காவில் தண்ணீா் தொட்டி அமைக்க எதிா்ப்பு தெரிவித்து குடியிருப்புவாசிகள் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

கோவை மாநகராட்சி சுங்கம் பகுதியில் சிவராம் நகா் உள்ளது. இங்குள்ள பூங்காவில் மாநகராட்சி சாா்பில் தண்ணீா் தொட்டி அமைப்பதற்கான பணிகள் தொடங்கப்பட்டுள்ளன. இதற்காக பூங்காவில் உள்ள சில மரங்கள் வெட்டப்படவுள்ளன. இதற்கு குடியிருப்புவாசிகள் எதிா்ப்பு தெரிவித்து வருகின்றனா்.

இந்நிலையில் பூங்காவில் தண்ணீா் தொட்டி கட்டுவதற்கு எதிா்ப்பு தெரிவித்து குடியிருப்புவாசிகள் பூங்கா முன் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். பூங்காவில் அமைக்கப்படும் தண்ணீா் தொட்டியை வேறு இடத்தில் அமைக்க மாநகராட்சி நிா்வாகத்துக்கு வலியுறுத்தினா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com