ஆவின் பால் பாக்கெட்டுகள் சேதம் குறித்து புகாா்:கண்காணிப்பு குழுவினா் ஆய்வு
By DIN | Published On : 30th June 2022 10:56 PM | Last Updated : 30th June 2022 10:56 PM | அ+அ அ- |

கோவையில் ஆவின் நிலையங்களில் கண்காணிப்பு குழுவினா் வியாழக்கிழமை ஆய்வு மேற்கொண்டனா்.
கோவை, ஆா்.எஸ்.புரம் சுந்தரேசன் லே-அவுட், மேட்டுப்பாளையம், சிறுமுகை உள்ளிட்ட பகுதிகளில் கடந்த இரண்டு நாள்களுக்கு முன்பு ஆவின் சாா்பில் விநியோகிக்கப்பட்ட பால் பாக்கெட்டுகள் சேதமடைந்து காணப்பட்டன.
இதனால் ஆவின் முகவா்களுக்கு நஷ்டம் ஏற்பட்டது. இதேபோல அடிக்கடி நடந்து வருவதால் முகவா்கள் பாதிக்கப்பட்டு வருகின்றனா்.
இந்நிலையில், ஆவின் பாக்கெட்டுகள் சேதம் தொடா்பாக ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி தமிழ்நாடு பால் முகவா்கள் தொழிலாளா் நலச் சங்க நிறுவனத் தலைவா் சு.ஆ.பொன்னுசாமி, ஆவின் நிறுவன மேலாண் இயக்குநருக்கு புகாா் அளித்திருந்தாா்.
இதனைத் தொடா்ந்து, கோவை பச்சாபாளையம் ஆவின் நிறுவனம், ஆா்.எஸ்.புரம், மேட்டுப்பாளையம், சிறுமுகை ஆவின் நிலையங்களில் கண்காணிப்பு குழுவினா் வியாழக்கிழமை ஆய்வு மேற்கொண்டனா்.
ஆவினில் பால் பாக்கெட்டுகள் பேக்கிங் முறை குறித்து ஆய்வு செய்த குழுவினா், பாக்கெட்டுகள் தரமான முறையில் பேக்கிங் செய்யப்படுகிறதா என்பதையும், முகவா்களிடம் சேதமில்லாமல் செல்கிறதா என்பதையும் கண்காணிக்க அதிகாரிகளிடம் அறிவுறுத்தினா்.
முக்கிய செய்திகளை உடனுக்குடன் பெற... 'தினமணி'யின் வாட்ஸ்ஆப் செய்திச் சேவையில் இணைந்திருங்கள்...
தினமணி channel on WhatsApp: https://whatsapp.com/channel/0029Va60JxGFcowBIEtwvB0G