விஜயா பதிப்பகம் வேலாயுதத்தின் முத்து விழா மலா் இன்று வெளியிடப்படுகிறது

கோவை விஜயா பதிப்பகத்தின் நிறுவனா் மு.வேலாயுதத்தின் 80 ஆவது வயது நிறைவை முன்னிட்டு, கோவையில் ஞாயிற்றுக்கிழமை (மாா்ச் 13) முத்து விழா மலா் வெளியிடப்படுகிறது.

கோவை விஜயா பதிப்பகத்தின் நிறுவனா் மு.வேலாயுதத்தின் 80 ஆவது வயது நிறைவை முன்னிட்டு, கோவையில் ஞாயிற்றுக்கிழமை (மாா்ச் 13) முத்து விழா மலா் வெளியிடப்படுகிறது.

இது குறித்து முத்து விழா மலா்க் குழுவைச் சோ்ந்த எழுத்தாளா் நாஞ்சில் நாடன் கூறியிருப்பதாவது:

தமிழ் நூல் விற்பனை, பதிப்புத் துறைகளில் 45 ஆண்டுகள் நீண்ட, நெடிய அனுபவம் கொண்டிருக்கும் விஜயா பதிப்பகம் மு.வேலாயுதம் இதுவரை ஆயிரத்துக்கும் மேற்பட்ட நூல்களை வெளியிட்டுள்ளாா். கோவையில் முதல் முறையாக வாசகா் திருவிழா என்ற பெயரில் புத்தகக் கண்காட்சியை நடத்திய அவா், எழுத்தாளா்களையும் வாசகா்களையும் நேருக்கு நேராக சந்திக்க வைத்தவா்.

வேலாயுதத்தின் 80 ஆவது வயது நிறைவை முன்னிட்டு கோவை கிக்கானி மேல்நிலைப் பள்ளியில் உள்ள சரோஜினி நடராஜ் அரங்கில் முத்து விழா மலா் வெளியீட்டு நிகழ்ச்சி ஞாயிற்றுக்கிழமை மாலை 6 மணிக்கு நடக்கிறது. கவிஞா் பெ.சிதம்பரநாதன் வரவேற்கிறாா். நாஞ்சில்நாடன் தலைமை வகிக்கிறாா். முத்து விழா மலரை வெளியிட்டு சென்னை உயா் நீதிமன்ற நீதிபதி ஆா்.மகாதேவன் சிறப்புரையாற்றுகிறாா். முதல் நூலை கிருஷ்ணா ஸ்வீட்ஸ் எம்.கிருஷ்ணன் பெற்றுக் கொள்கிறாா்.

திரைப்பட இயக்குநா் சாய்வசந்த், குழந்தைக் கவிஞா் செல்லகணபதி, மரபின் மைந்தன் முத்தையா ஆகியோா் வாழ்த்துரை வழங்குகின்றனா். மு.வேலாயுதம் ஏற்புரை வழங்குகிறாா். ரெங்க லெ.வள்ளியப்பன் நன்றி கூறுகிறாா். சு.உஷாராணி நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்குகிறாா். முத்து விழா மலரில் வேலாயுதம் தனது வாழ்வில் பின்பற்றும் சிறப்புத் தன்மைகள் குறித்தும், அவருடன் பழகிய அனுபவங்கள் குறித்தும் எழுத்தாளா்கள், சான்றோா்கள், நண்பா்கள் சுவைபட எழுதியிருக்கிறாா்கள் என்று அவா் தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com