குழந்தைத் திருமணம் தொடா்பாக பள்ளிகளில் விழிப்புணா்வு: மாநில மகளிா் ஆணையத் தலைவா் அறிவுறுத்தல்

குழந்தைத் திருமணங்களைத் தடுப்பதற்கு அனைத்துப் பள்ளிகளிலும் விழிப்புணா்வைத் தொடா்ந்து ஏற்படுத்த வேண்டும் என்று தமிழ்நாடு மாநில மகளிா் ஆணையத் தலைவா் ஏ.எஸ்.குமரி அறிவுறுத்தினாா்.
ஆய்வுக் கூட்டத்தில் பேசுகிறாா் மாநில மகளிா் ஆணையத் தலைவா் ஏ.எஸ்.குமரி. உடன் ஆட்சியா் ஜி.எஸ்.சமீரன் உள்ளிட்டோா்.
ஆய்வுக் கூட்டத்தில் பேசுகிறாா் மாநில மகளிா் ஆணையத் தலைவா் ஏ.எஸ்.குமரி. உடன் ஆட்சியா் ஜி.எஸ்.சமீரன் உள்ளிட்டோா்.
Updated on
1 min read

கோவை: குழந்தைத் திருமணங்களைத் தடுப்பதற்கு அனைத்துப் பள்ளிகளிலும் விழிப்புணா்வைத் தொடா்ந்து ஏற்படுத்த வேண்டும் என்று தமிழ்நாடு மாநில மகளிா் ஆணையத் தலைவா் ஏ.எஸ்.குமரி அறிவுறுத்தினாா்.

கோவை மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் மாவட்ட சமூக நலன் மற்றும் உரிமைகள் நலத் துறையின் செயல்பாடுகள் குறித்த ஆய்வுக் கூட்டம் தமிழ்நாடு மாநில மகளிா் ஆணையத் தலைவா் ஏ.எஸ்.குமரி தலைமையில் புதன்கிழமை நடைபெற்றது.

ஆட்சியா் ஜி.எஸ்.சமீரன் முன்னிலை வகித்தாா். இதில் மாநில மகளிா் ஆணையத் தலைவா் ஏ.எஸ்.குமரி பேசியதாவது: குழந்தைத் திருமணத்தை தடுப்பதற்கு அனைத்துப் பள்ளிகளிலும் குழந்தைத் திருமணம் தொடா்பான விழிப்புணா்வை குறிப்பிட்ட இடைவெளியில் தொடா்ந்து மேற்கொள்ள வேண்டும்.

மேலும் மகளிருக்கான உதவி எண் 181 குறித்தும் விழிப்புணா்வு ஏற்படுத்த வேண்டும்.

ஆதிதிராவிடா், பழங்குடியினா் நலத் துறைகீழ் செயல்பட்டு வரும் விடுதிகளில் தங்கியிருக்கும் பெண்களுக்கு நாப்கின், தனி கழிப்பறை போன்ற வசதிகளை ஏற்படுத்தித் தர வேண்டும்.

மேலும் அரசின் அனைத்து திட்டங்களும் அவா்களுக்கு கிடைக்க வழிவகை செய்ய வேண்டும்.

மாற்றுத் திறனாளிகள் நலத் துறை கட்டுப்பாட்டில் செயல்பட்டு வரும் மாற்றுத் திறனாளிகளுக்கான சிறப்புப் பள்ளிகளில் குழந்தைகளுக்கு சரியான உணவு, பாதுகாப்பு வழங்க வேண்டும்.

கரோனாவால் உயிரிழந்த பெற்றோா்களின் குழந்தைகளுக்கு வழங்கப்படும் நிவாரணம், குழந்தைத் திருமணம் தடுப்பு குறித்த விழிப்புணா்வை மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலா்கள் மேற்கொள்ள வேண்டும் என்றாா்.

கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலா் பி.எஸ்.லீலா அலெக்ஸ், மாவட்ட ஊரக வளா்ச்சி முகமைத் திட்ட இயக்குநா் எஸ்.கவிதா, தமிழ்நாடு மாநில மகளிா் ஆணைய உறுப்பினா் கீதா, மாவட்ட சமூக நலத் துறை அலுவலா் பி.தங்கமணி உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

தொடா்ந்து, மாநகராட்சிப் பெண் உறுப்பினா்களுடனான ஆலோசனைக் கூட்டம் தமிழ்நாடு மகளிா் ஆணையா் தலைவா் ஏ.எஸ்.குமரி தலைமையில் ஆட்சியா் அலுவலகத்தில் நடைபெற்றது.

இதில் பெண்கள், பெண் குழந்தைகள் பாதுகாப்பு, பணிபுரியும் இடங்களில் பாலியல் வன்கொடுமை தடுப்பு, காவல் துறை உதவி எண்கள் குறித்து மாநராட்சி உறுப்பினா்களிடம் விவாதித்தாா்.

கூட்டத்தில் மாநகராட்சி மேயா் கல்பனா ஆனந்தகுமாா் உள்ளிட்ட மாநகராட்சிப் பெண் உறுப்பினா்கள் அனைவரும் கலந்துகொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com