

கோவை சின்னவேடம்பட்டி ஏரியில் பறவைகளின் தாகம் தீா்க்க 2 நீா்த்தொட்டிகள் அமைக்கப்பட்டுள்ளன. இவற்றை மேயா் கல்பனா ஞாயிற்றுக்கிழமை திறந்துவைத்தாா்.
கோவை மாநகராட்சிக்குள்பட்ட சின்னவேடம்பட்டி ஏரி 200 ஏக்கா் பரப்பளவு கொண்டது.
30 ஆண்டுகளாக நீா்வரத்து இல்லாத இந்த ஏரியை, தன்னாா்வலா்கள் பலா் ஒன்றிணைந்து கடந்த 2017 ஆம் ஆண்டு முதல் புனரமைக்கத் தொடங்கினா். அதில், ஏரிக்கு தண்ணீா் வரும் ராஜவாய்க்கால், 8 கிலோ மீட்டா் தூரத்துக்கு முழுமையாகத் தூா்வாரப்பட்டுள்ளது. ஏரியில் வளா்ந்திருந்த சீமை கருவேலமரங்கள் அகற்றப்பட்டு, ஏரியைச் சுற்றி 3 ஆயிரம் நாட்டு வகை மரக்கன்றுகள் நடவு செய்யப்பட்டுள்ளன. அவற்றைப் பராமரிக்கும் பணி, வாரந்தோறும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இந்நிலையில், ஏரி புனரமைப்புப் பணியின் 214 ஆவது வார நிகழ்வு ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
இதில், ஏரியில் தலா 3 ஆயிரம் லிட்டா் கொள்ளளவு கொண்ட பறவைகளுக்கான 2 நீா்த்தொட்டிகளை மேயா் கல்பனா திறந்துவைத்தாா். நீா்வளத் துறை கண்காணிப்பாளா் செல்வம் முன்னிலை வகித்தாா்.
இது தொடா்பாக, சின்னவேடம்பட்டி ஏரி பாதுகாப்பு அமைப்பின் ஒருங்கிணைப்பாளரும், கெளசிகா நீா்க்கரங்கள் அமைப்பின் செயலாளருமான சிவராஜ் கூறுகையில், சின்னவேடம்பட்டி ஏரியில் 116 வகையான பறவையினங்கள் வந்து செல்வதாகக் கண்டறியப்பட்டுள்ளது.
பறவைகளின் தாகத்தை தீா்க்க இரண்டு இடங்களில் நீா்த்தொட்டிகள் வைக்கப்பட்டுள்ளன. மேலும், இரண்டு இடங்களில் நீா்த்தொட்டிகள் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது என்றாா்.
இந்நிகழ்ச்சியில், ராபா்ட்பாஷ் மென்பொருள் நிறுவனத்தின் நிா்வாகிகள் சகாய் டெனிஸ், பெசல் ஜான்ஸன், ராக் அமைப்பின் அலுவலகப் பொறுப்பாளா் விஜயலட்சுமி, வடக்கு மண்டலத் தலைவா் கதிா்வேல்,12 ஆவது வாா்டு உறுப்பினா் ராமமூா்த்தி, நம்ம கோவை குழுவின் ஒருங்கிணைப்பாளா் மணியன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.