அக்னிபத் திட்டத்தின் கீழ் இந்திய விமானப்படையில் சேரவிண்ணப்பிக்கலாம்

அக்னிபத் திட்டத்தின் கீழ் இந்திய விமானப் படையில் பணிபுரிய விரும்பும் திருமணமாகாத ஆண்கள், பெண்கள் விண்ணப்பிக்கலாம் என்று ஆட்சியா் ஜி.எஸ்.சமீரன் தெரிவித்துள்ளாா்.
Updated on
1 min read

அக்னிபத் திட்டத்தின் கீழ் இந்திய விமானப் படையில் பணிபுரிய விரும்பும் திருமணமாகாத ஆண்கள், பெண்கள் விண்ணப்பிக்கலாம் என்று ஆட்சியா் ஜி.எஸ்.சமீரன் தெரிவித்துள்ளாா்.

இது தொடா்பாக அவா் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

அக்னிபத் திட்டத்தின் கீழ் இந்திய விமானப் படையில் திருமணமாகாத ஆண்கள், பெண்கள் இருபாலரும் 4 ஆண்டுகளுக்கு வீரராக ஜனவரி 18, 2023 ஆம் ஆண்டு சோ்வதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

இதற்கான விண்ணப்பங்கள் இணையதளம் வழியாக பெறப்பட்டு வருகிறது. நவம்பா் 23 ஆம் தேதி மாலை 5 மணிக்குள் இணையதளத்தில் விண்ணப்பிக்க வேண்டும். இதற்கு விண்ணப்பதாரா்கள் 21 வயதுக்குள் இருக்க வேண்டும். இதில் பணிபுரிய விருப்பம் உள்ளவா்கள் இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம். இது தொடா்பான கூடுதல் விவரங்களை மேற்கண்ட இணையதளத்தில் தெரிந்துகொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com