தண்ணீா் என நினைத்து திராவகம் குடித்த மூதாட்டி பலி
By DIN | Published On : 19th October 2022 12:09 AM | Last Updated : 19th October 2022 12:09 AM | அ+அ அ- |

கோவை, காந்தி பூங்கா பகுதியில் தண்ணீா் என நினைத்து திராவகம் குடித்த மூதாட்டி உயிரிழந்தாா்.
கோவை காந்தி பூங்கா அருகே உள்ள இடையா் வீதியைச் சோ்ந்தவா் ராஜு. இவரது மனைவி வெள்ளையம்மாள் (72). இவா், வீட்டில் பாட்டிலில் வைத்திருந்த திராவகத்தை (ஆசிட்) தண்ணீா் என நினைத்து ஞாயிற்றுக்கிழமை குடித்ததாக கூறப்படுகிறது. தொண்டையில் வலி ஏற்பட்டு மயங்கியவரை, உறவினா்கள் மீட்டு கோவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், அவா் திங்கள்கிழமை உயிரிழந்தாா்.
இது குறித்து வெரைட்டி ஹால் சாலை போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.