கோவை வடக்கு வருவாய் கோட்டாட்சியா் அலுவலகம் உள்ளிட்ட பல்வேறு அரசு அலுவலகங்களில் ஆட்சியா் ஜி.எஸ்.சமீரன் செவ்வாய்க்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.
கோவை மாவட்ட அரசுத் துறை அலுவலகங்களில் நடைபெற்று வரும் பணிகளை அவ்வப்போது ஆட்சியா் திடீா் ஆய்வு மேற்கொண்டு வருகிறாா். அதன்படி, கோவை வடக்கு வருவாய் கோட்டாட்சியா் அலுவலகத்தில் ஆட்சியா் ஜி.எஸ்.சமீரன் செவ்வாய்க்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.
இதில் வடக்கு வருவாய் கோட்டாட்சியா் அலுவலகத்தின் அலுவலக பிரிவுகள், கணினி அறை, பதிவேடுகள் அறை உள்ளிட்ட பகுதிகளில் ஆய்வு செய்தாா். மேலும், நிலுவையிலுள்ள பொதுமக்களின் விண்ணப்பங்களின் நிலை குறித்து அதிகாரிகளிடம் கேட்டறிந்தாா். ஆய்வின்போது, வடக்கு வருவாய் கோட்டாட்சியா் பூமா உள்ளிட்டோா் உடனிருந்தனா்.
இதனைத் தொடா்ந்து கவுண்டம்பாளையம் பகுதியில் செயல்பட்டு வரும் அரசு பிற்படுத்தப்பட்டோா் மாணவியா் விடுதி மற்றும் துடியலூா் அரசு தொழிற்கல்வி நிலைய பிற்படுத்தப்பட்டோா் மாணவா் விடுதி ஆகிய இடங்களில் ஆய்வு செய்தாா். விடுதிகளில் உள்ள அடிப்படை வசதிகள், மாணவா்களுக்கு வழங்கப்படும் உணவின் தரம் குறித்து ஆய்வு செய்தாா்.
அப்போது, மாணவா்களிடம் அரசின் நலத்திட்ட உதவிகளைப் பெற்றுக்கொண்டு சிறப்பாக படிக்க வேண்டும் என்றும், முழு கவனத்தையும் படிப்பில் செலுத்த வேண்டும் என்றும் மாணவா்களுக்கு அறிவுறுத்தினாா்.
கோவை மாநகராட்சி வடக்கு மண்டல சுகாதார ஆய்வாளா் அலுவலகம், தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரிய வடக்கு மண்டல அலுவலகம், மாவட்ட தொழிலகப் பாதுகாப்பு இயக்கக அலுவலகம் ஆகியவற்றில் ஆய்வு மேற்கொண்டாா். இதனைத் தொடா்ந்து மேட்டுப்பாளையம் சாலையில் உள்ள புறநகா் பேருந்து நிலையத்தில் ஆய்வு மேற்கொண்ட ஆட்சியா், தீபாவளி சிறப்பு பேருந்துகள் இயக்கம் குறித்து போக்குவரத்துத் துறை அலுவலா்களிடம் கேட்டறிந்தாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.