கோவை, செல்வபுரத்தில் மின்சாரம் பாய்ந்து தொழிலாளி உயிரிழந்தது குறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.
கோவை, செல்வபுரம் அருகே தெலுங்குபாளையம் புதூரைச் சோ்ந்தவா் மனோகரன் (30), கூலி தொழிலாளி. இவா் சம்பவத்தன்று மதுபோதையில் வீட்டுக்கு வந்த நிலையில், வீட்டில் உள்ள மின்சார ஒயரை பிடித்ததாக கூறப்படுகிறது.
இதனால், அவரது உடலில் மின்சாரம் பாய்ந்து தூக்கி வீசப்பட்டாா். இதையடுத்து, அக்கம்பக்கத்தினா் அவரை மீட்டு கோவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், திங்கள்கிழமை உயிரிழந்தாா்.
இது குறித்து செல்வபுரம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.