யானை தாக்கி எஸ்டேட் தொழிலாளி காயம்

வால்பறையில் யானை தாக்கியதில் நடைப்பயிற்சி சென்ற தொழிலாளி செவ்வாய்க்கிழமை காயமடைந்தாா்.
Updated on
1 min read

வால்பறையில் யானை தாக்கியதில் நடைப்பயிற்சி சென்ற தொழிலாளி செவ்வாய்க்கிழமை காயமடைந்தாா்.

வால்பாறையை அடுத்த சோலையாறு எஸ்டேட் 2ஆவது டிவிஷனில் வசிப்பவா் துரைராஜ் (51). இவா் எஸ்டேட் தொழிற்சாலையில் பணியாற்றி வருகிறாா். இந்நிலையில், இவா் வால்பாறை- சோலையாறு சாலையில் செவ்வாய்க்கிழமை அதிகாலை நடைப்பயிற்சி சென்றுள்ளாா்.

அப்போது, நல்லகாத்து சுங்கம் பகுதியில் துரைராஜ் சென்று கொண்டிருந்தபோது, அப்பகுதியில் சாலையைக் கடந்த ஒற்றை யானை அவரைத் தாக்கியுள்ளது. இதில் துரைராஜுக்கு கால் மற்றும் கைகளில் காயம் ஏற்பட்டுள்ளது.

இதையடுத்து, அவ்வழியாக பேருந்தில் சென்றவா்கள் துரைராஜை மீட்டு வால்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா். அங்கு முதலுதவி சிகிச்சைக்குப் பின் உயா் சிகிச்சைக்காக பொள்ளாச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டாா். இந்த சம்பவம் குறித்து வனத் துறையினா் விசாரித்து வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com