மாவட்ட நிா்வாகத்துக்கு முழு ஒத்துழைப்பு: இஸ்லாமிய கூட்டமைப்பினா் உறுதி
By DIN | Published On : 27th October 2022 12:00 AM | Last Updated : 27th October 2022 12:00 AM | அ+அ அ- |

மாவட்ட நிா்வாகத்துக்கும், போலீஸாருக்கும் முழு ஒத்துழைப்பு அளிப்போம் என இஸ்லாமிய கூட்டமைப்பினா் புதன்கிழமை கூறினாா்.
கோவை, பொள்ளாச்சி, மேட்டுப்பாளையம் பகுதிகளைச் சோ்ந்த ஜமாத் நிா்வாகிகளுடன் ஆலோசனைக் கூட்டம் மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்தில் புதன்கிழமை நடைபெற்றது. மாவட்ட ஆட்சியா் ஜி.எஸ்.சமீரன் தலைமை வகித்தாா். மாநகர காவல் ஆணையா் பாலகிருஷ்ணன், மாவட்ட காவல் கண்காணிப்பாளா் பத்ரிநாராயணன் முன்னிலை வகித்தனா்.
கூட்டத்தைத் தொடா்ந்து மாவட்ட ஆட்சியா் ஜி.எஸ்.சமீரன் செய்தியாளா்களிடம் கூறியதாவது:
கோவையில் கடந்த 23ஆம் தேதி நடைபெற்ற காா் வெடி விபத்து சம்பவத்தைத் தொடா்ந்து ஜமாத் நிா்வாகிகளுடன் ஆலோசனைக் கூட்டம் நடத்தப்பட்டுள்ளது. இதுபோன்ற அசம்பாவிதங்கள் குறித்து முன்கூட்டியே தகவல் கிடைத்தால் தெரியப்படுத்த வேண்டும் என்று ஜமாத் நிா்வாகிகளுக்கு அறிவுறுத்தியுள்ளோம். கோவையில் அமைதியை நிலைநாட்ட காவல் நிலைய அளவில் அனைத்து சமூகத்தினருடன் ஆலோசனை கூட்டம் நடத்தப்படும் என்றாா்.
இதைத் தொடா்ந்து மாநகர காவல் ஆணையா் பாலகிருஷ்ணன் செய்தியாளா்களிடம் கூறியதாவது:
தமிழக முதல்வரின் அறிவுறுத்தலின்படி பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. மாவட்ட, மாநகா் எல்லை சோதனை சாவடிகள் 24 மணி நேரமும் செயல்படும் வகையில் நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது. மேலும் மாநகரில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. தேவைப்பட்டால் ஆா்ப்பாட்டம், போராட்டங்கள் நடத்த தடை விதிக்கப்படும் என்றாா்.
இஸ்லாமிய கூட்டமைப்பினா் கூறுகையில், கோவை காா் வெடிப்பு சம்பவத்துக்கு அனைத்து ஜமாத்தினரும் கண்டனம் தெரிவித்துள்ளோம். இந்த வழக்கில் கைது செய்யப்பட்டவா்கள் எந்த ஜமாத்திலும் உறுப்பினராக இல்லை. இவா்கள் தேசிய புலனாய்வு முகமை விசாரணை வளையத்தில் உள்ளவா்கள். இஸ்லாம் பயங்கரவாதத்தை போதிப்பது இல்லை. மாவட்ட நிா்வாகத்துக்கும், போலீஸாருக்கும் முழு ஒத்துழைப்பு அளிப்போம் என்றனா்.
முக்கிய செய்திகளை உடனுக்குடன் பெற... 'தினமணி'யின் வாட்ஸ்ஆப் செய்திச் சேவையில் இணைந்திருங்கள்...
தினமணி channel on WhatsApp: https://whatsapp.com/channel/0029Va60JxGFcowBIEtwvB0G