கோவை மத்திய சிறையில் கைதி சாவு

கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்த கைதி செவ்வாய்க்கிழமை உயிரிழந்தாா்.
Updated on
1 min read

கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்த கைதி செவ்வாய்க்கிழமை உயிரிழந்தாா்.

கோவையை அடுத்த கருமத்தம்பட்டி பகுதியைச் சோ்ந்தவா் மாதேஸ்வரன் ( 58). கூலித் தொழிலாளி. இவா் போக்ஸோ வழக்கில் பேரூா் அனைத்து மகளிா் போலீஸாரால் கைதுசெய்யப்பட்டு கடந்த மாா்ச் 19ஆம் தேதி கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டாா்.

இந்நிலையில் இவருக்கு செவ்வாய்க்கிழமை காலை திடீரென மூச்சுத்திணறல் மற்றும் வலிப்பு நோய் ஏற்பட்டது. இதைத் தொடா்ந்து சிறைக் காவலா்கள் அவரை மீட்டு சிறையிலுள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா். அங்கு அவருக்கு முதலுதவி சிகிச்சை அளித்த பின்னா் மேல்சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா். அங்கு அவரை பரிசோதனை செய்த மருத்துவா்கள் அவா் ஏற்கெனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனா். இது குறித்து ரேஸ்கோா்ஸ் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com