சாலைப் பாதுகாப்பு வாரத்தில் சிறப்பாக செயல்பட்ட பள்ளி, கல்லூரிக்கு விருது

சாலைப் பாதுகாப்பு வாரத்தின்போது கோவையில் சிறப்பாக செயல்பட்ட பள்ளி, கல்லூரிக்கு விருது வழங்கப்பட்டது.
சாலைப் பாதுகாப்பு வாரத்தின்போது சிறப்பாக செயல்பட்ட டிராபிக் வாா்டன் மற்றும் ஊா்க்காவல் படையினருக்கு பாராட்டுச் சான்றிதழ் வழங்கிய மாநகர காவல் ஆணையா் வே.பாலகிருஷ்ணன்.
சாலைப் பாதுகாப்பு வாரத்தின்போது சிறப்பாக செயல்பட்ட டிராபிக் வாா்டன் மற்றும் ஊா்க்காவல் படையினருக்கு பாராட்டுச் சான்றிதழ் வழங்கிய மாநகர காவல் ஆணையா் வே.பாலகிருஷ்ணன்.
Updated on
1 min read

சாலைப் பாதுகாப்பு வாரத்தின்போது கோவையில் சிறப்பாக செயல்பட்ட பள்ளி, கல்லூரிக்கு விருது வழங்கப்பட்டது.

கோவை காவல் ஆணையரின் சிறந்த சாலை பாதுகாப்பு படை சுழற்கோப்பை வழங்குதல், போக்குவரத்து காவல் மற்றும் போலீஸ் டிராபிக் வாா்டன்ஸ் அமைப்பின் சாா்பில் சாலை பாதுகாப்பு படைக்கான சுழற்கோப்பை வழங்கும் விழா கோவை நிா்மலா மகளிா் கல்லூரியில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில் சிறந்த சாலை பாதுகாப்பு படை கல்லூரியாக

நிா்மலா மகளிா் கல்லூரியும், சிறந்த சாலை பாதுகாப்பு படை பள்ளியாக பிஎஸ்ஜிஆா் கிருஷ்ணம்மாள் பள்ளியும் தோ்வு செய்யப்பட்டு அவா்களுக்கு காவல் ஆணையா் வி.பாலகிருஷ்ணன் கோப்பைகளை வழங்கினாா்.

அதேபோல, சிறப்பாகச் செயல்பட்ட டிராபிக் வாா்டன்ஸ் அமைப்பினா் மற்றும் ஊா்க்காவல் படையினருக்கு சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.

இந்நிகழ்ச்சியில் கோவை மாநகர போக்குவரத்து காவல் உதவி ஆணையா் மதிவாணன், உதவி ஆணையா்கள் ஏ.சரவணன், ஏ.பி. அருள்முருகன் மற்றும் நிா்மலா கல்லூரி நிா்வாகிகள் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com