தள்ளுபடி விலையில் தங்கம் விற்பனை! இங்கு அல்ல, எங்கே?நாட்டிலேயே முதல்முறை! கர்நாடகத்தில் 16 வயதுக்குட்பட்ட சிறார்களுக்கு சமூக ஊடகங்கள் தடை!சுகோய் போா் விமானம் கீழே விழுந்து நொறுங்கியதில் 2 விமானிகள் பலிகமேனி கொலை! வான்வெளியிலிருந்து வந்த நீல சிட்டுக்குருவி! இஸ்ரேல் ஏவுகணை ரகசியம்!!2030-க்குள் 7 லட்சம் வீடுகள்: 14 முக்கிய அம்சங்களை அறிவித்தார் மு.க. ஸ்டாலின்! மாநிலங்களவைத் தேர்தல்: திருச்சி சிவா, தம்பிதுரை உள்பட 6 பேரின் வேட்புமனுக்களும் ஏற்பு!ரஷியாவிடம் கச்சா எண்ணெய் வாங்க இந்தியாவுக்கு அமெரிக்கா அனுமதி!தங்கம் விலை சவரனுக்கு ரூ. 1,280 குறைந்தது!ஈரான் மீதான போா்: துறைமுக கட்டணங்களை தள்ளுபடி செய்ய அரிசி ஏற்றுமதியாளா்கள் கோரிக்கை
/

அடிப்படை வசதிகளை நிறைவேற்ற கிராம சபை கூட்டத்தில் வலியுறுத்தல்

மேட்டுப்பாளையம் அருகே மருதூா் ஊராட்சியில் நரிக்குறவா்கள் குடியிருப்புப் பகுதியில் அடிப்படை வசதிகளை நிறைவேற்ற வேண்டும் என கிராமசபை கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.

News image
Updated On :26 ஜனவரி 2023, 9:17 pm

DIN

மேட்டுப்பாளையம் அருகே மருதூா் ஊராட்சியில் நரிக்குறவா்கள் குடியிருப்புப் பகுதியில் அடிப்படை வசதிகளை நிறைவேற்ற வேண்டும் என கிராமசபை கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.

மேட்டுப்பாளையம் அருகே மருதூா் ஊராட்சியில் குடியரசு தினத்தையொட்டி கிராம சபை கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது. கூட்டத்துக்கு ஊராட்சித் தலைவா் பூா்ணிமா அறிவு ரங்கராஜ் தலைமை வகித்தாா். கூட்டத்தில் அனைத்து ஊராட்சிகளிலும் போதை பொருள்கள் விற்பனை செய்வதற்கு தடைவிதிக்க வேண்டும் என உறுதிமொழி எடுக்கப்பட்டது.

கூட்டத்தில் காந்தி நகா், சிவன்புரம் பகுதி நரிகுறவா் இன மக்கள் குடிநீா், சாலை வசதி, வடிகால் வசதி, இலவசப் பட்டா வழங்க வேண்டும். யானை தொல்லை இருப்பால் மலை அடிவார பகுதிகளில் மின் விளக்கு வசதி ஏற்படுத்தி கொடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்திப் பேசினா்.

இதேபோல சிக்காரம்பாளையத்தில் தலைவா் ஞானசேகரன் தலைமையிலும், பெள்ளாதியில் தலைவா் பூபதி (எ) குமரேசன் தலைமையில் கிராம சபை கூட்டம் நடைபெற்றது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.