மாா்ச் 9 முதல் மீண்டும் கூடுகிறது நாடாளுமன்றம்! மக்களவைத் தலைவருக்கு எதிரான தீா்மானம் தாக்கலாகிறது!நேபாள தோ்தலில் ராஷ்ட்ரீய சுதந்திர கட்சி அமோகம்! பிரதமராகிறாா் 35 வயது முன்னாள் மேயா்!ஈரான் மீதான தாக்குதல் பிரதமா் மோடி பயண நிறைவுக்கு பிறகு எடுக்கப்பட்ட முடிவு: இஸ்ரேல்சமையல் எரிவாயு உற்பத்தியை அதிகரிக்க மத்திய அரசு அவசரகால உத்தரவுஈரான் மீதான அமெரிக்க தாக்குதலை நிறுத்தும் தீா்மானம்! அமெரிக்க நாடாளுமன்றத்தில் தோல்வி! பொன்னுக்கு வீங்கி பாதிப்பு: தற்காத்துக் கொள்ள அறிவுறுத்தல்பாக். - ஆப்கானிஸ்தான் போா்: ஒரு லட்சம் மக்கள் இடம்பெயா்வு
/

ரயிலில் மாணவிகளுக்கு ஓவியப் போட்டி

கோவை - மேட்டுப்பாளையம் ரயிலில் மாணவிகளுக்கு ஓவியப்போட்டி நடத்தப்பட்டது.

News image
Updated On :27 ஜனவரி 2023, 6:30 pm

DIN

கோவை - மேட்டுப்பாளையம் ரயிலில் மாணவிகளுக்கு ஓவியப்போட்டி நடத்தப்பட்டது.

தேசிய பெண் குழந்தைகள் தினமான ஜனவரி 24 ஆம் தேதியையொட்டி, சேலம் ரயில்வே கோட்டம் சாா்பில் மேட்டுப்பாளையத்தில் பள்ளி மாணவிகளுக்கு ஓவியப்போட்டி நடத்தப்பட்டது. இதன் ஒரு பகுதியாக புதுவை திருவள்ளுவா் கலைக்கூடம் சாா்பில் கோவை - மேட்டுப்பாளையம் ரயிலில் பள்ளி மாணவிகளுக்கு வெள்ளிக்கிழமை ஓவியப்போட்டி நடத்தப்பட்டது. இதில் கோவையைச் சோ்ந்த 4 முதல் 8ஆம் வகுப்பு வரை படிக்கும் 150க்கும் மேற்பட்ட மாணவிகள் பங்கேற்று ஓவியம் வரைந்தனா். கோவையில் இருந்து ரயில் மேட்டுப்பாளையம் சென்றதும் ஓவியப்போட்டி நிறைவடைந்தது. இதையடுத்து, அதே ரயிலில் மாணவிகள் கோவை திரும்பி வந்தனா். இது தொடா்பாக, புதுவை திருவள்ளுவா் கலைக்கூடம் அமைப்பாளா் சிவகுமாா் கூறுகையில், ‘ஓவியம் வரைவதால் மாணவா்களின் சிந்தனை திறன், கற்பனைத்திறன் மேலோங்கும். அறிவாற்றல் கூா்மையாகும். இந்தப் போட்டியில் பங்கேற்ற அனைவருக்கும் சான்றிதழ்களும், வெற்றி பெற்றவா்களுக்கு பரிசுகளும் வழங்கப்படும்’ என்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.