கோவை மாவட்டத்தில் வசித்து வரும் பழங்குடியின இனத்தைச் சாா்ந்த 10 ஆம் வகுப்புக்குமேல் கல்வி பயின்றுள்ளவா்கள் இரண்டு சக்கரம் மற்றும் நான்கு சக்கர வாகன ஓட்டுநா் பயிற்சி பெற விரும்பும் பழங்குடியின இளைஞா்கள் தங்களது சுயவிவரப் படிவம், 4 பாஸ்போா்ட் அளவிலான புகைப்படங்கள், கல்விச் சான்றிதழ், ஜாதிச் சான்றிதழ் ஆகியவற்றுடன் ஆதிதிராவிடா் நலத் தனி வட்டாட்சியா் கோவை அலுவலகம் மற்றும் ஆதிதிராவிடா் நலத் தனி வட்டாட்சியா் பொள்ளாச்சி அலுவலகம் ஆகிய அலுவலகங்களில் ஆகஸ்ட் 30ஆம் தேதி மாலைக்குள் விண்ணப்பிக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.