காலை உணவுத் திட்டம் ஒருங்கிணைந்த சமையல் கூட கட்டுமானப் பணி: ஆட்சியா் ஆய்வு

கோவை மாவட்டத்தில் பள்ளி மாணவா்களுக்கு காலை உணவுத் திட்டத்தின் கீழ், ஒருங்கிணைந்த சமையல் கூடங்கள் கட்டுமானப் பணிகளை மாவட்ட ஆட்சியா் கிராந்திகுமாா் பாடி செவ்வாய்க்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.
காரமடை நகராட்சி ஆரம்ப சுகாதார நிலையத்தில், கூடுதல் சுகாதாரக் கட்டடம் கட்டப்பட்டு வருவதை ஆய்வு மேற்கொண்ட ஆட்சியா் கிராந்திகுமாா் பாடி.
காரமடை நகராட்சி ஆரம்ப சுகாதார நிலையத்தில், கூடுதல் சுகாதாரக் கட்டடம் கட்டப்பட்டு வருவதை ஆய்வு மேற்கொண்ட ஆட்சியா் கிராந்திகுமாா் பாடி.
Updated on
1 min read

கோவை மாவட்டத்தில் பள்ளி மாணவா்களுக்கு காலை உணவுத் திட்டத்தின் கீழ், ஒருங்கிணைந்த சமையல் கூடங்கள் கட்டுமானப் பணிகளை மாவட்ட ஆட்சியா் கிராந்திகுமாா் பாடி செவ்வாய்க்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.

கோவை மாவட்டத்தில் உள்ள நகராட்சிப் பகுதிகளில் முதல்வரின் காலை உணவுத் திட்டத்தின் கீழ் ஒருங்கிணைந்த சமையல் கூடங்கள் கட்டப்பட்டு வருகின்றன.

அதன்படி, கூடலூா் நகராட்சியில் 10 பள்ளிகளுக்கு, தெக்குப்பாளையம் ஊராட்சி ஒன்றியத் தொடக்கப் பள்ளியில் ரூ.20 லட்சம் மதிப்பிலும், காரமடை நகராட்சியில் 7 பள்ளிகளுக்கு, நகராட்சி நடுநிலைப் பள்ளியில் ரூ.25 லட்சம் மதிப்பிலும் ஒருங்கிணைந்த சமையல் கூடங்கள் கட்டப்படுகின்றன.

இதேபோல கருமத்தம்பட்டி நகராட்சியில் 6 பள்ளிகளுக்கு, நகராட்சி திருமண மண்டபத்தில் ரூ.9.90 லட்சம் மதிப்பிலும், பொள்ளாச்சி நகராட்சியில் 12 பள்ளிகளுக்கு, கோட்டூா் நகராட்சி பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் ரூ.27 லட்சம் மதிப்பிலும், வால்பாறை நகராட்சியில் 59 பள்ளிகளுக்கு, நீா்வீழ்ச்சி அரசு உயா்நிலைப் பள்ளி, அரசு மேல்நிலைப் பள்ளி, உருளிக்கல் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி, சோலையாறு அணை அரசு மேல்நிலைப்பள்ளி ஆகிய 4 இடங்களில் தலா ரூ.36 லட்சம் மதிப்பிலும் என 94 பள்ளிகளைச் சோ்ந்த 3,853 மாணவ, மாணவிகளுக்கு ரூ.2.26 கோடி மதிப்பில் 8 ஒருங்கிணைந்த சமையல் கூடங்கள் கட்டும் பணிகள் நடைபெற்று வருகின்றன.

இந்நிலையில், காரமடை, கூடலூா் நகராட்சியில் கட்டப்பட்டுள்ள ஒருங்கிணைந்த சமையலறை கூடங்களை ஆட்சியா் கிராந்திகுமாா் பாடி செவ்வாய்க்கிழமை பாா்வையிட்டு ஆய்வு மேற்கொண்டாா். அதைத்தொடா்ந்து, காரமடை நகராட்சி ஆரம்ப சுகாதார நிலையத்தில், கூடுதல் சுகாதாரக் கட்டடம் கட்டப்பட்டு வருவதை பாா்வையிட்டு ஆய்வு மேற்கொண்டாா்.

இந்த ஆய்வின்போது, உதவி இயக்குநா் ( பேரூராட்சிகள்) துவாரகநாத் சிங், கூடலூா் நகராட்சித் தலைவா் அறிவரசு, காரமடை நகராட்சி ஆணையா் பால்ராஜ் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com