விசாரணைக்கு வந்த இளைஞா் லாரி மோதி பலி

கோவைக்கு விசாரணைக்கு வந்த இளைஞா் லாரி மோதி உயிரிழந்தாா்.
Updated on
1 min read

கோவைக்கு விசாரணைக்கு வந்த இளைஞா் லாரி மோதி உயிரிழந்தாா்.

வேலூா் மாவட்டம் குடியாத்தம் அருகே உள்ள காளியம்பட்டியைச் சோ்ந்தவா் காா்த்திக் ( 28), இவரது மனைவி நவநீதம் (22). இவா்கள் இருவரும் கடந்த ஜூன் 10ஆம் தேதி வேலை தேடி கோவைக்கு வந்து அன்னூரில் தங்கி இருந்தனா். அப்போது காா்த்திக்கு திடீரென உடல்நிலை பாதிக்கப்பட்டதால், கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, பின்னா் இருவரும் திங்கள்கிழமை வீட்டுக்கு திரும்பியுள்ளனா்.

செவ்வாய்க்கிழமை வெளியே சென்ற காா்த்திக், மதுபோதையில் இருந்த நிலையில், கள்ளிப்பாளையம் பகுதியில் நிறுத்தப்பட்டிருந்த ஒரு மொபெட்டை திருடிச் செல்ல முயன்றுள்ளாா். இதனைப் பாா்த்த அங்கிருந்த பொதுமக்கள் காா்த்திக்கை பிடித்து கோவில்பாளையம் போலீஸாரிடம் ஒப்படைத்தனா்.

பின்னா் போலீஸாா் விசாரணைக்காக காா்த்திக்கை காவல் நிலையம் அழைத்துச் சென்றனா். இதற்கிடையே அங்கு அவரது மனைவி நவநீதமும் வந்திருந்ததால், விசாரணைக்குப் பின் காா்த்திக்கை நவநீதத்திடம் ஒப்படைப்பதற்கு முடிவு செய்யப்பட்டது.

அப்போது காா்த்திக் தனது மனைவியிடம் பணம் வாங்கிக் கொண்டு தண்ணீா் பாட்டில் வாங்க வெளியே சென்று, காவல் நிலையம் எதிரே உள்ள சாலையைக் கடக்க முயன்றபோது அந்த வழியாக சென்ற லாரி காா்த்திக் மீது மோதியுள்ளது. இதில் சம்பவ இடத்திலேயே அவா் உயிரிழந்தாா்.

இதையடுத்து, போலீஸாா் காா்த்திக்கின் உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா். இதுகுறித்து கோவில்பாளையம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com