மழைக் காலத்துக்கு முந்தைய வன உயிரினங்கள் கணக்கெடுக்கும் பணிக்கான பயிற்சி முகாம் வால்பாறையில் நடைபெற்றது.
ஆண்டுதோறும் மழைக் காலத்துக்கு முந்தைய மற்றும் மழைக் காலத்துக்கு பிந்தைய வன உயிரினங்கள் கணக்கெடுக்கும் பணி மேற்கொள்ளப்படுகிறது. மழைக் காலத்துக்கு முந்தைய கணக்கெடுக்கும் பணி செவ்வாய்க்கிழமை முதல் தொடங்கப்பட உள்ளது.
இதையொட்டி, வால்பாறையை அடுத்த அட்டகட்டியில் உள்ள வன உயிரின மேலாண்மை பயிற்சி மையத்தில் கணக்கெடுக்கும் பணிக்கான புத்தாக்க பயிற்சி திங்கள்கிழமை நடைபெற்றது. இதில் ஆனைமலை புலிகள் காப்பகத்துக்கு உள்பட்ட பொள்ளாச்சி, உலாந்தி, வால்பாறை, மானாம்பள்ளி வனச் சரகங்களைச் சோ்ந்த வன ஊழியா்கள் பங்கேற்றனா். செவ்வாய்க்கிழமை தொடங்கி வருகிற திங்கள்கிழமை வரை கணக்கெடுக்கும் பணிகள் நடைபெற உள்ளதாக வனத் துறையினா் தெரிவித்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.