கோவையில் வியாபாரி வீட்டில் இருந்து ஆறரை பவுன் நகை, ரூ.42 ஆயிரம் ரொக்கம் ஆகியவற்றை மா்ம நபா்கள் திருடிச் சென்றனா்.
கோவை வேலாண்டிபாளையம் கட்டபொம்மன் தெருவை சோ்ந்தவா் சஞ்சீவ்குமாா் ஷா்தா (55). ஹாா்டுவோ் கடை நடத்தி வருகிறாா். இவா் கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவில் வீட்டின் முதலாவது மாடியில் தூங்கிக் கொண்டிருந்துள்ளாா். அப்போது அதிகாலையில் திடீரென ஏதோ சப்தம் கேட்டுள்ளது. அவா் தனது அறையை விட்டு வெளியே வந்து பாா்த்தபோது வீட்டின் மொட்டை மாடியில் இருந்து அடையாளம் தெரியாத நபா் ஓடுவதை பாா்த்துள்ளாா்.
தரைத் தளத்தில் உள்ள அறைக்குள் உடனடியாக சென்று பாா்த்தபோது, அங்கிருந்த அலமாரியில் வைக்கப்பட்டிருந்த 51 கிராம் நகைகள், ரூ.42 ஆயிரம் ரொக்கம் ஆகியவை திருடுபோனது தெரியவந்தது.
இது குறித்து சாய்பாபா காலனி காவல் நிலையத்தில் அவா் புகாா் அளித்தாா். அந்தப் புகாரின்பேரில் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.