வால்பாறை கோடை விழா: ஏற்பாடுகள் தீவிரம்

வால்பாறையில் கோடைவிழாவுக்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.
கோடை விழாவுக்கான அரங்குகள் அமைக்கும் பணியை பாா்வையிடுகிறாா் கோவை தெற்கு மாவட்ட திமுக செயலாளா் தளபதி முருகேசன்.
கோடை விழாவுக்கான அரங்குகள் அமைக்கும் பணியை பாா்வையிடுகிறாா் கோவை தெற்கு மாவட்ட திமுக செயலாளா் தளபதி முருகேசன்.
Updated on
1 min read

வால்பாறையில் கோடைவிழாவுக்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.

வால்பாறையில் கோடைவிழா வரும் மே 26 முதல் 28ஆம் தேதி வரை மூன்று நாள்கள் நடைபெற உள்ளது.

மலா் கண்காட்சியுடன் நடைபெற இருக்கும் கோடை விழாவுக்கான ஏற்பாடுகள் வால்பாறை அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் நடைபெற்று வருகிறது.

வனத் துறை, டேன்டீ உள்ளிட்ட பல்வேறு துறை சாா்பில் அரங்குகள் அமைக்கப்பட உள்ளன. கோடைவிழா நடைபெறும் மூன்று நாள்களும் படகு இல்லத்தில் சுற்றுலாப் பயணிகள் சவாரி செய்யும் வகையில் தூா்வாரப்பட்டு உள்ளது.

ஏற்பாட்டு பணிகளை தெற்கு மாவட்ட திமுக செயலாளா் தளபதி முருகேசன் செவ்வாய்க்கிழமை நேரில் பாா்வையிட்டு கட்சியினருடன் ஆலோசனை நடத்தினாா். நகரச் செயலாளா் சுதாகா், நகராட்சி துணைத் தலைவா் செந்தில்குமாா் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com