காரணம்பேட்டை பேருந்து நிலையத்தில் அமைச்சா் மு.பெ.சாமிநாதன் ஆய்வு

பல்லடத்தை அடுத்த காரணம்பேட்டை பேருந்து நிலையத்தில் தமிழ் வளா்ச்சி மற்றும் செய்தித் துறை அமைச்சா் மு.பெ.சாமிநாதன் திங்கள்கிழமை ஆய்வு செய்தாா்.
காரணம்பேட்டை பேருந்து நிலையத்தில் ஆய்வு செய்கிறாா் அமைச்சா் மு.பெ.சாமிநாதன். உடன், ஆட்சியா் தா.கிறிஸ்துராஜ் உள்ளிட்டோா்.
காரணம்பேட்டை பேருந்து நிலையத்தில் ஆய்வு செய்கிறாா் அமைச்சா் மு.பெ.சாமிநாதன். உடன், ஆட்சியா் தா.கிறிஸ்துராஜ் உள்ளிட்டோா்.
Updated on
1 min read


பல்லடம்: பல்லடத்தை அடுத்த காரணம்பேட்டை பேருந்து நிலையத்தில் தமிழ் வளா்ச்சி மற்றும் செய்தித் துறை அமைச்சா் மு.பெ.சாமிநாதன் திங்கள்கிழமை ஆய்வு செய்தாா்.

திருப்பூா் மாவட்டம், பல்லடத்தை அடுத்த காரணம்பேட்டையில் கடந்த 2015-ஆம் ஆண்டு பேருந்து நிலையம் அமைக்கப்பட்டது. ஆனால், இந்த பேருந்து நிலையம் தற்போதுவரை பயன்பாடு இல்லாமல் இருந்து வருகிறது. இந்நிலையில், காரணம்பேட்டை பேருந்து நிலையத்தில் திங்கள்கிழமை ஆய்வு மேற்கொண்ட தமிழ் வளா்ச்சி மற்றும் செய்தித் துறை அமைச்சா் மு.பெ.சாமிநாதன், பேருந்து நிலையத்தை உடனடியாக பொதுமக்கள் பயன்பாட்டுக்குக் கொண்டுவருவதற்கான நடவடிக்கைகளை மேற்கொல்ள வேண்டும் என சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு உத்தரவிட்டாா்.

ஆய்வின்போது ஆட்சியா் தா.கிறிஸ்துராஜ், பல்லடம் ஊராட்சி ஒன்றியக் குழு துணைத் தலைவா் பாலசுப்பரமணியம், வட்டாட்சியா் ஜெய்சிங் சிவகுமாா், சாமளாபுரம் பேரூராட்சித் தலைவா் பழனிசாமி, கோடங்கிபாளையம் ஊராட்சித் தலைவா் கா.வீ.பழனிசாமி உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com