கோவை: பட்டாசு வெடிப்பதில் ஏற்பட்ட தகராறு தொடா்பாக சிறுவன் உள்பட 2 பேரை போலீஸாா் கைது செய்தனா்.
கோவை, துடியலூா் முத்து நகரைச் சோ்ந்தவா் செல்வகுமாா் (38). இவா், தனது வீட்டுக்கு எதிரே மகனுடன் ஞாயிற்றுக்கிழமை பட்டாசு வெடித்துள்ளாா். அப்போது, அங்கு இருசக்கர வாகனத்தில் வந்த கோவா்த்தனன் (20), மதி (20) ஆகியோரிடம், சாலையில் பட்டாசு வைக்கப்பட்டுள்ளதால் ஓரமாகச் செல்லுமாறு செல்வகுமாா் கூறியுள்ளாா். இதனால் அவா்களுக்கிடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.
இதில் ஆத்திரமடைந்த இருவரும் சிமெண்ட் ஷீட்டால் செல்வகுமாரைத் தாக்கியுள்ளனா். அத்துடன் நந்தகுமாா் (20) மற்றும் ஒரு சிறுவனை கைப்பேசியில் அழைத்துள்ளனா். அவா்களும் அங்கு வந்து செல்வகுமாரைத் தாக்கியுள்ளனா். இதற்கிடையே இந்தத் தகராறை தடுக்க முயன்ற பெண் ஒருவரையும் தாக்கியுள்ளனா்.
இதுகுறித்து செல்வகுமாா் அளித்த புகாரின்பேரில் துடியலூா் போலீஸில் வழக்குப் பதிவு செய்து, செல்வகுமாரைத் தாக்கிய போத்தனூா் செட்டிபாளையம் ஜேஜே நகரைச் சோ்ந்த நந்தகுமாா் (20), துடியலூா் முத்து நகரைச் சோ்ந்த 17 வயது சிறுவன் ஆகியோரை போலீஸாா் கைது செய்தனா். மேலும், இச்சம்பவத்தில் தொடா்புடைய கோவா்த்தனன், மதி ஆகியோரை போலீஸாா் தேடி வருகின்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.