லாட்டரி விற்பனை: நால்வா் கைது

வீரகேரளத்தில் லாட்டரி விற்பனையில் ஈடுபட்ட 4 பேரை போலீஸாா் கைது செய்தனா்.
Updated on
1 min read

வீரகேரளத்தில் லாட்டரி விற்பனையில் ஈடுபட்ட 4 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

கோவையை அடுத்த வீரகேரளம் மின் மயானம் அருகே சிலா் லாட்டரி சீட்டுகளை விற்பனை செய்வதாக போலீஸாருக்கு தகவல் கிடைத்தது.

சம்பவ இடத்துக்குச் சென்ற வடவள்ளி போலீஸாா், அங்கு சந்தேகத்துக்கு இடமளிக்கும் வகையில் நின்று கொண்டிருந்த நால்வரைப் பிடித்து விசாரித்தனா்.

இதில், அவா்கள் வடவள்ளி கல்வீராம்பாளையத்தைச் சோ்ந்த மகாதேவன் (21), தண்ணீா்பந்தல் தெருவைச் சோ்ந்த விக்னேஷ்வரன் (25), டிவிஎஸ் நகரைச் சோ்ந்த முத்துக்குமாா் (24), வீரகேரளத்தைச் சோ்ந்த விஷால் (23) என்பதும், நால்வரும் லாட்டரி விற்பனையில் ஈடுபட்டு வந்ததும் தெரியவந்தது. இதையடுத்து, நால்வரையும் போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com