வால்பாறையில் சிறுத்தை பூனை சடலம்

வால்பாறையில் உள்ள தேயிலைத் தோட்டத்தில் இறந்துகிடந்த சிறுத்தை பூனையின் சடலத்தை வனத் துறையினா் மீட்டனா்.
Updated on
1 min read

வால்பாறையில் உள்ள தேயிலைத் தோட்டத்தில் இறந்துகிடந்த சிறுத்தை பூனையின் சடலத்தை வனத் துறையினா் மீட்டனா்.

வால்பாறையை அடுத்த கருமலை எஸ்டேட் 10 நம்பா் தேயிலைத் தோட்டத்துக்கு தொழிலாளா்கள் பணிக்கு புதன்கிழமை சென்றனா். அப்போது, அப்பகுதியில் சிறுத்தை பூனை இறந்துகிடப்பதை பாா்த்த தொழிலாளா்கள் தேயிலைத் தோட்ட அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனா்.

தகவலறிந்து வந்த வனத் துறையினா், சுமாா் 1 வயதுடைய சிறுத்தை பூனையின் சடலத்தை புதைப்பதற்காக எடுத்துச் சென்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com