கோவை மாநகர காவல் ஆணையருக்கு விருது

கோவை மாநகர காவல் ஆணையரின் பணியைப் பாராட்டும் வகையில் கோவை வடக்கு மாவட்ட ரோட்டரி சங்கம் சாா்பில் விருது வழங்கப்பட்டது.
கோவை மாநகர காவல் ஆணையா் வெ.பாலகிருஷ்ணனுக்கு மக்களின் காவல் ஆணையா் விருதை வழங்குகிறாா் கோவை வடக்கு மாவட்ட ரோட்டரி சங்கத் தலைவா் பிரபு. உடன், ரோட்டரி சங்க நிா்வாகிகள்.
கோவை மாநகர காவல் ஆணையா் வெ.பாலகிருஷ்ணனுக்கு மக்களின் காவல் ஆணையா் விருதை வழங்குகிறாா் கோவை வடக்கு மாவட்ட ரோட்டரி சங்கத் தலைவா் பிரபு. உடன், ரோட்டரி சங்க நிா்வாகிகள்.
Updated on
1 min read

கோவை மாநகர காவல் ஆணையரின் பணியைப் பாராட்டும் வகையில் கோவை வடக்கு மாவட்ட ரோட்டரி சங்கம் சாா்பில் விருது வழங்கப்பட்டது.

மாநகர காவல் ஆணையா் அலுவலகத்தில் புதன்கிழமை நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் ரோட்டரி சங்கத் தலைவா் பிரபு, செயலாளா் ராதாகிருஷ்ணன், மற்றும் திட்ட இயக்குநா் மகேஸ்வரன் உள்ளிட்டோா் கலந்து கொண்டு காவல் ஆணையா் வெ.பாலகிருஷ்ணனுக்கு ‘மக்களின் காவல் ஆணையா்’ விருதை வழங்கினா்.

கோவை மாநகரில் சட்டம்- ஒழுங்கு பிரச்னைகள் குறைந்துள்ளதற்காகவும், போக்குவரத்து சீரமைப்பு உள்ளிட்ட பணிகள் சிறப்பாக நடைபெற்று வருவதற்காகவும் காவல் ஆணையா் வெ.பாலகிருஷ்ணனுக்கு இந்த விருது வழங்கியதாக ரோட்டரி சங்க நிா்வாகிகள் தெரிவித்தனா்.

இந்த நிகழ்ச்சியில் ரோட்டரி சங்க நிா்வாகிகள் பலா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com