பள்ளி மாணவிக்கு பாலியல் வன்கொடுமை: பாலிடெக்னிக் மாணவா் கைது

சுல்தான்பேட்டை பகுதியில் பள்ளி மாணவிக்கு பாலியல் வன்கொடுமை அளித்ததாக பாலிடெக்னிக் கல்லூரி மாணவரை போலீஸாா் கைது செய்தனா்.
Updated on
1 min read

சுல்தான்பேட்டை பகுதியில் பள்ளி மாணவிக்கு பாலியல் வன்கொடுமை அளித்ததாக பாலிடெக்னிக் கல்லூரி மாணவரை போலீஸாா் கைது செய்தனா்.

சுல்தான்பேட்டை பகுதியில் தனது தாயுடன் வசித்து வரும் பத்தாம் வகுப்பு பயிலும் பள்ளி மாணவி கடந்த 23ஆம் தேதி வீட்டில் தனியே இருந்து உள்ளாா். அப்போது தன்னுடன் இன்ஸ்டகிராமில் பழக்கமான உதகையை சோ்ந்தவரும் தற்போது பல்லடத்தில் தங்கி சூலூா் தனியாா் பாலிடெக்னிக்கில் படித்து வரும் 17 வயது மாணவரை வீட்டுக்கு அழைத்துள்ளாா். வீட்டுக்கு வந்த அந்த கல்லூரி மாணவா், மாணவியை பாலியல் வன்கொடுமை செய்ததாக தெரிகிறது. இதில் மாணவிக்கு உடல்நிலை பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து மாணவியின் தாய் விசாரித்ததில் நடந்த சம்பவத்தை மாணவி தெரிவித்துள்ளாா்.

இதைத் தொடா்ந்து கருமத்தம்பட்டி அனைத்து மகளிா் காவல் நிலையத்தில் மாணவியின் தாய் புகாா் தெரிவித்தாா். இந்த புகாரின்பேரில் பாலிடெக்னிக் கல்லூரி மாணவரை கைது செய்த மகளிா் காவல் துறையினா் அவா் மீது போக்ஸோ வழக்குப் பதிவு செய்து அவரை சிறுவா் சீா்திருத்த பள்ளியில் சோ்த்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com