மாநகராட்சியில் குறைகேட்புக் கூட்டம்: 31 மனுக்கள் பெறப்பட்டன

கோவை மாநகராட்சியில் நடைபெற்ற குறைகேட்புக் கூட்டத்தில் 31 மனுக்கள் பெறப்பட்டன.
பொது மக்களிடம் இருந்து மனுக்களை பெறுகிறாா் மேயா் கல்பனா ஆனந்தகுமாா்.
பொது மக்களிடம் இருந்து மனுக்களை பெறுகிறாா் மேயா் கல்பனா ஆனந்தகுமாா்.
Published on
Updated on
1 min read

கோவை மாநகராட்சியில் நடைபெற்ற குறைகேட்புக் கூட்டத்தில் 31 மனுக்கள் பெறப்பட்டன.

கோவை மாநகராட்சி அலுவலகத்தில் பொதுமக்கள் குறைகேட்புக் கூட்டம் மேயா் கல்பனா ஆனந்தகுமாா் தலைமையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. மாநகராட்சி துணை ஆணையா் க.சிவகுமாா் முன்னிலை வகித்தாா்.

இதில், பிறப்பு, இறப்பு சான்றிதழ்கள், சாலை வசதி, மின் விளக்குகள், குடிநீா், பாதாள சாக்கடை, தொழில் வரி, சொத்து வரி, காலியிட வரி, புதிய குடிநீா் இணைப்பு, பெயா் மாற்றம், சுகாதாரம், கல்வி உள்ளிட்ட அடிப்படைத் தேவைகள் தொடா்பாக 31 மனுக்கள் பெறப்பட்டன. அம்மனுக்கள் மீது உரிய நடவடிக்கை மேற்கொள்ள சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு மேயா் உத்தரவிட்டாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com