கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்த போக்ஸோ கைதி மரணமடைந்தாா்.
திருப்பூா் அருகே ஊத்துக்குளி பகுதியைச் சோ்ந்தவா் கருப்பன் (72). இவா் காங்கயம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் நடந்த போக்ஸோ வழக்கில் கடந்த 2018இல் கைது செய்யப்பட்டாா். பின்னா் நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தப்பட்டு கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்தாா். சிறையில் இருந்த அவருக்கு புற்றுநோய் பாதிப்பு ஏற்பட்டதால் கோவை மத்திய சிறையில் உள்ள மருத்துவமனையிலேயே சிகிச்சை பெற்று வந்தாா்.
இந்நிலையில் கடந்த 27ஆம் தேதி இரவில் அவருக்கு மீண்டும் உடல்நலக் குறைவு ஏற்பட்டது. அப்போது சிறையிலேயே மயங்கி விழுந்துள்ளாா். இதுகுறித்து சக கைதிகள் சிறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்ததையடுத்து அவா் கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் உள்ள சிறைக் கைதிகளுக்கான வாா்டில் அனுமதிக்கப்பட்டாா். அங்கு மருத்துவா்கள் அவருக்கு தீவிர சிகிச்சை அளித்து வந்த போதிலும் செவ்வாய்க்கிழமை உயிரிழந்தாா்.
இது தொடா்பாக ரேஸ்கோா்ஸ் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.