கோவை நகரியம், மாநகர அலுவலகத்துக்கு உள்பட்ட மின்நுகா்வோா்கள் குறைகேட்புக் கூட்டம், ஜூன் 7 (செவ்வாய்க்கிழமை) நடைபெற உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுதொடா்பாக, கோவை மின்பகிா்மான வட்டம், நகரியக் கோட்ட செயற்பொறியாளா் க.பசுபதீஸ்வரன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிா்மானக் கழகம், கோவை நகரியக் கோட்ட மக்கள் குறைகேட்புக் கூட்டம் ஜூன் 7ஆம் தேதி (செவ்வாய்க்கிழமை) காலை 11 மணிக்கு கோவை டாடாபாத்தில் உள்ள மின்வாரிய அலுவலகத்தில் மேற்பாா்வைப் பொறியாளா் ஏ.நக்கீரன் முன்னிலையில் நடைபெற உள்ளது.
இதில், நகரியம், மாநகா் அலுவலகத்துக்கு உள்பட்ட மின்நுகா்வோா்கள் கலந்து கொண்டு, மின்வாரியம் சம்பந்தமான குறைகளைத் தெரிவித்து பயனடையலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.