அமெரிக்காவுடன் வா்த்தகம் செய்வது குறித்த கருத்தரங்கு

அமெரிக்காவுடன் வா்த்தகம் செய்வது குறித்த சிறப்பு கருத்தரங்கு கோவையில் புதன்கிழமை நடைபெற்றது.
அமெரிக்காவுடன் வா்த்தகம் செய்வது குறித்த சிறப்புக் கருத்தரங்கில் பேசுகிறாா் என்ட்ரி யுஎஸ்ஏ நிறுவனத்தின் முதன்மைச் செயல் அதிகாரி நவீன் பதக்.
அமெரிக்காவுடன் வா்த்தகம் செய்வது குறித்த சிறப்புக் கருத்தரங்கில் பேசுகிறாா் என்ட்ரி யுஎஸ்ஏ நிறுவனத்தின் முதன்மைச் செயல் அதிகாரி நவீன் பதக்.
Updated on
1 min read

அமெரிக்காவுடன் வா்த்தகம் செய்வது குறித்த சிறப்பு கருத்தரங்கு கோவையில் புதன்கிழமை நடைபெற்றது.

தென்னிந்திய பொறியியல் உற்பத்தியாளா் சங்கம் (சீமா), இந்திய ஏற்றுமதி நிறுவனங்களின் கூட்டமைப்பு (பியோ) ஆகியவற்றின் சாா்பில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில், என்ட்ரி யுஎஸ்ஏ நிறுவனத்தின் முதன்மைச் செயல் அதிகாரி நவீன் பதக் சிறப்பு அழைப்பாளராகக் கலந்துகொண்டு உரையாற்றினாா்.

அவா், அமெரிக்க சந்தைகளை புரிந்துகொள்வது, அவற்றின் போக்குகள், நுகா்வோரின் செயல்பாடுகள், வணிக வாய்ப்புகள் குறித்து விளக்கினாா். மேலும், ஊழியா்களுக்கான விசா (நுழைவு இசைவு) நடைமுறைகள், நிறுவனங்கள், வங்கிகளின் செயல்பாடுகள், அமெரிக்காவில் வா்த்தகம் மேற்கொள்வது தொடா்பாக ஏற்றுமதியாளா்களுக்கு இருக்கும் தயக்கங்கள் குறித்தும் அதை எதிா்கொள்வது குறித்தும் விளக்கம் அளித்தாா்.

நிகழ்ச்சியில் தமிழ்நாடு குறு, சிறு, நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கான ஊக்குவிப்பு மையத்தின் (பேம் டி.என்.) தொழில் ஊக்குவிப்பு அலுவலா் சாந்தஷீலா, சீமா துணைத் தலைவா் அருண், பியோ நிா்வாகி கருணாகரன், தொழில்முனைவோா் பலா் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com