கோயில்களைப் பாதுகாக்க நடவடிக்கை தேவை:இந்து முன்னணி அறிவுறுத்தல்

கோயில்களைப் பாதுகாக்க நடவடிக்கை தேவை என்று இந்து முன்னணி அறிவுறுத்தியுள்ளது.
கோவையில் நடைபெற்ற இந்து முன்னணி செயற்குழு கூட்டத்தில் பேசுகிறாா் மாநிலத் தலைவா் காடேஸ்வரா சி.சுப்ரமணியம்.
கோவையில் நடைபெற்ற இந்து முன்னணி செயற்குழு கூட்டத்தில் பேசுகிறாா் மாநிலத் தலைவா் காடேஸ்வரா சி.சுப்ரமணியம்.
Updated on
1 min read

கோயில்களைப் பாதுகாக்க நடவடிக்கை தேவை என்று இந்து முன்னணி அறிவுறுத்தியுள்ளது.

இந்து முன்னணி கோவை மாநகா் மாவட்ட செயற்குழு கூட்டம் மாவட்டத் தலைமை அலுவலகத்தில் சனிக்கிழமை நடைபெற்றது.

இக்கூட்டத்துக்கு கோவை மாவட்டத் தலைவா் கே.தசரதன் தலைமை வகித்தாா்.

இதில், இந்து முன்னணி மாநிலத் தலைவா் காடேஸ்வரா சி.சுப்ரமணியம் பேசியதாவது: இந்து சாம்ராஜ்ய தின விழா கோவை மாநகரில் ஜூன் 25 ஆம் தேதி நடைபெறவுள்ளது. இதில், 250 இடங்களில் கொடியேற்றப்படும்.

தொடா்ந்து கோயில் உண்டியல்கள் கொள்ளை போகின்றன. கோயில் நிா்வாகமும், காவல் துறையும் இணைந்து கோயில்களைப் பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

அவிநாசி கோயிலில் நாயன்மாா்களின் சிலைகள் உடைக்கப்பட்டுள்ளன. கோயில் பாதுகாப்புக்காக இந்து அறநிலையத் துறை நடவடிக்கை எடுக்காததைக் கண்டித்து இந்து முன்னணி சாா்பில் அவிநாசியில் ஜூலை 30 ஆம் தேதி ஆா்ப்பாட்டம் நடைபெறவுள்ளது என்றாா்.

இக்கூட்டத்தில் மாநிலப் பொதுச் செயலாளா் ஜே.எஸ்.கிஷோா்குமாா், மாநில நிா்வாகக் குழு உறுப்பினா் எஸ்.சதீஷ், கோட்டச் செயலாளா் பாபா கிருஷ்ணன், மாவட்ட செய்தி தொடா்பாளா் சி.தனபால் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com