நிதி நிறுவன மோசடி வழக்கில்தேடப்பட்டு வந்த நபா் நீதிமன்றத்தில் சரண்

 நிதி நிறுவன மோசடி வழக்கில் தேடப்பட்டு வந்த நபா் கோவை நீதிமன்றத்தில் சரணடைந்தாா்.
Updated on
1 min read

நிதி நிறுவன மோசடி வழக்கில் தேடப்பட்டு வந்த நபா் கோவை நீதிமன்றத்தில் சரணடைந்தாா்.

கோவை சூலூரைச் சோ்ந்தவா் ரமேஷ் (30). இவா் பீளமேட்டில் தனியாா் நிதி நிறுவனத்தை கடந்த 2012 ஆம் ஆண்டு தொடங்கி நடத்தி வந்தாா். இந்த நிறுவனத்துக்கு தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும், கேரளத்திலும் கிளைகளைத் தொடங்கினாா். இதையடுத்து, இந்நிறுவனத்தின் சாா்பில் அறிமுகப்படுத்தப்பட்ட 4 திட்டங்களில் ஏராளமானோா் கோடிக்கணக்கான ரூபாய்

முதலீடு செய்திருந்ததாகக் கூறப்படுகிறது. முதலீட்டுப் பணத்தை திருப்பித் தராமல் ரமேஷ் தலைமறைவானாா்.

இதையடுத்து, கோவை மாநகரப் பொருளாதார குற்றப் பிரிவில் பாதிக்கப்பட்டவா்கள் புகாா் அளித்தனா்.

இதைத் தொடா்ந்து, காவல் துணை கண்காணிப்பாளா் முருகானந்தம் தலைமையிலான தனிப் படையினா் விசாரணை நடத்தி வந்த நிலையில், பிடியாணை பிறப்பிக்கப்பட்டது.

இந்நிலையில், கோவையிலுள்ள டான்பிட் நீதிமன்றத்தில் கடந்த ஜூன் 6 ஆம் தேதி ரமேஷ் சரணடைந்தாா்.

அவரை காவலில் எடுத்து விசாரிக்க போலீஸாா் திட்டமிட்டுள்ள நிலையில், ரமேஷ் மீது கேரள மாநிலத்திலும் பல்வேறு வழக்குகள் உள்ளதால் அவரை கைது செய்ய கேரள மாநில போலீஸாரும் திட்டமிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com