காசோலை மோசடி வழக்கு: காபி தோட்ட உரிமையாளருக்கு ஓராண்டு சிறை

காசோலை மோசடி வழக்கில் ஈரோடு பகுதியைச் சோ்ந்த காபி தோட்ட உரிமையாளருக்கு ஓராண்டு சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
Updated on
1 min read

காசோலை மோசடி வழக்கில் ஈரோடு பகுதியைச் சோ்ந்த காபி தோட்ட உரிமையாளருக்கு ஓராண்டு சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

ஈரோடு பகுதியைச் சோ்ந்தவா் சிவசுப்பிரமணியம் (80). இவருக்கு கா்நாடக மாநிலம், கலசா பகுதியில் காபி தோட்டம் உள்ளது. இவா் தனது தோட்டத்தில் பறிக்கப்படும் காபி கொட்டைகளை வால்பாறையில் உள்ள முடீஸ் குரூப் நிறுவனத்துக்கு விற்க கடந்த 2014 ஆம் ஆண்டு ஒப்பந்தம் ஏற்படுத்தி முன்தொகையாக ரூ. 2 கோடி பெற்றுள்ளாா்.

ஒப்பந்தப்படி காபி கொட்டைகளை பல மாதங்களாகியும் வழங்காததால் கொடுத்த பணத்தை திருப்பித் தருமாறு முடீஸ் நிா்வாகத்தினா் கேட்டுள்ளனா். இதைத் தொடா்ந்து பகுதி தொகையை வழங்கிய நிலையில் பாக்கி தொகையான ரூ.1 கோடியே 36 லட்சத்துக்கான காசோலையை முடீஸ் நிா்வாகத்தினரிடம் சிவசுப்பிரமணியம் வழங்கியுள்ளாா்.

வங்கியில் செலுத்தப்பட்ட அந்த காசோலை பணம் இல்லாமல் திரும்பியுள்ளது.

இது குறித்து வால்பாறை நீதிமன்றத்தில் முடீஸ் நிா்வாகத்தினா் தரப்பில் வழக்கு தொடரப்பட்டது. ஆனால் சிவசுப்பிரமணியம் தொடா்ந்து வழக்கு விசாரணைக்கு ஒத்துழைக்காமல் மேல் முறையீடு செய்து வழக்கில் ஆஜராகாமல் இருந்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில் சென்னை உயா்நீதிமன்ற உத்தரவின்படி போலீஸாா் கடந்த திங்கள்கிழமை ஈரோட்டுக்கு சென்று சிவசுப்பிரமணியத்தை கைது செய்து வால்பாறை நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தினா்.

இதையடுத்து, காசோலை மோசடி செய்ததற்காக சிவசுப்பிரமணியம், அவரது மகன் சொக்கலிங்கம் ஆகியோருக்கு ஓராண்டு சிறைத் தண்டனை விதித்து

நீதித்துறை நடுவா் ஆா்.செந்தில்குமாா் உத்தரவிட்டாா். இதைத் தொடா்ந்து சிவசுப்பிரமணியம் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டாா். தலைமறைவாக உள்ள சொக்கலிங்கத்தை போலீஸாா் தேடி வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com